வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க இந்த வன்னி மர வழிபாட்டை ஒரு முறை செய்து பலன் பெறுங்கள்

vanni-cash
- Advertisement -

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் நம் கையில் பணம் தங்குவதற்கு இறைவனின் அருள் இருக்க வேண்டும். அனைத்து தெய்வங்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி தான். எனவே இவர்களின் அருள் இருந்தால் மட்டுமே நமது கையிலும், நமது வீட்டிலும் நிரந்தரமாக தங்கும். அவ்வாறு மகாலட்சுமியின் அருள் கிடைத்திட நமது வீட்டில் தரித்திரம் விலக வேண்டும். அதற்கு நாம் செய்யும் சில பழக்கவழக்கங்களை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க இந்தப் பரிகாரத்தையும் தவறாமல் செய்து வர நிச்சயம் பலன் உண்டாகும். இந்த சமூகம் மாடர்னாக மாறினாலும் இவ்வாறான பூஜை பரிகாரங்களை எவரொருவர் கவனமாக, முறையாகச் செய்கிறார்களோ அவர்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதை பார்த்திருக்க முடியும். வாருங்கள் அவ்வாறு நம்மிடமும் பணம் தங்க இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வீட்டின் வாசல் பகுதியில் எப்பொழுதும் கோலமிட்டு வைத்திருக்க வேண்டும். நிலை வாசலில் இரு புறங்களிலும் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து அலங்காரம் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் மகாலட்சுமி ஒரு வீட்டின் நிலை வாசலை கவனித்து பார்த்த பிறகுதான் நமது வீட்டிற்குள் நுழைவாள்.

- Advertisement -

அவ்வாறு வீட்டின் வாசலில் வீடு பெருக்கும் கிடைப்பதை மற்றவர் கண்ணில் படும்படி அங்கும் இங்குமாக போட்டு வைக்கக்கூடாது. இவ்வாறு வைத்திருந்தால் வருகின்ற மகாலட்சுமியும் நமது வீட்டிற்குள் நுழையாமல் அப்படியே பின்னோக்கி சென்று விடுவாள்

இவ்வாறு பணம் கையில் சேரவும் மகாலட்சுமி அருள் கிடைக்கும் பலவித பரிகாரங்கள் இருக்கின்றன. அதில் சிறந்த பலனை கொடுக்க கூடிய ஒரு பரிகாரம் தான் இந்த வன்னி மர பூஜை. பல கோயில்களில் வன்னிமரம் இருப்பதை பார்த்திருப்போம். முந்தைய காலத்தில் முனிவர் ஒருவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு வன்னி மரத்தின் இலையை ஊதியமாக கொடுக்க, அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப இந்த இலை தங்கமாக மாறிவிடுமாம்.

- Advertisement -

அப்படி தங்கத்தை அருளிய இந்த வன்னி மரத்திற்கு பூஜை செய்ய நமது வீட்டிலும் செல்வ வளங்களும் நிறைய ஆரம்பிக்கும். இந்த பூஜையை சுக்கிர ஓரையில் செய்ய வேண்டும். சரியாக சுக்கிர ஓரை துவங்கியதும் வன்னி மரத்திற்கு சிறிதளவு பசும்பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

தொடர்ந்து 24 வாரங்கள் இந்த பூஜையை செய்து வந்தால் நமது வீட்டில் மலை போல் செல்வங்கள் உயர ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் எந்த வகையிலாவது நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் செய்கின்ற அனைத்தும் லாபமாக முடியும். பணப் பற்றாக்குறை மறைந்து குடும்பத்தில் எப்போதும் செல்வச் செழிப்பான நிலை மேலோங்கும்.

- Advertisement -