தரித்திரம் நீங்க லட்சுமி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

bathing lakshmi
- Advertisement -

நமக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும். ஒருவரிடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவரால் எந்தவித நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. அதை மீறி செய்தாலும் அந்த காரியத்தில் எந்தவித நன்மைகளும் ஏற்படாது. அதனால் முதலில் தன்னிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விளக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலாக திகழக்கூடிய தரித்திரத்தை நீக்கி லஷ்மி கடாட்சத்தை ஏற்படுத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

செல்வ கடாட்சம் ஏற்பட பரிகாரம்

நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அது தானாக வந்ததாக இருந்தாலும் சரி பிறர் நமக்கு செய்ததாக இருந்தாலும் சரி அதை நாம் தரித்திரியம் என்று கூறலாம். அப்படிப்பட்ட தரித்திரியம் இருக்கும் பட்சத்தில் நம்மிடம் எந்தவித பணமும் சேராது. எந்த வித தெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்காது. இதை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

நம் உடலில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்வதற்கு அன்றாடம் நாம் குளிப்போம். அதேபோல் நம்முடைய உடலுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும் என்றாலும் நம் குளிக்கும் பொழுது சில பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பொருட்கள் நமக்கு மிகவும் எளிதில் கிடைக்கும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அதனால் நமக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது.

மேலும் தெய்வம்சம் பொருந்திய சில பொருட்களை நாம் குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்கும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி லஷ்மி கடாட்சம் ஏற்படும். லட்சுமி கடாட்சம் ஏற்பட வேண்டும் என்றால் லஷ்மி தேவிக்கு உகந்த பொருட்களை நாம் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி லக்ஷ்மி தேவிக்கு உகந்த பொருளாக கருதப்படுவது தான் துளசி செடி.

- Advertisement -

பலருக்கும் துளசிச்செடியின் இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அதைவிட மிகவும் உயரியதாக இருப்பதுதான் துளசி செடியின் மண். இந்த மண்ணில் உலகத்தில் இருக்கக்கூடிய புனித தீர்த்தங்கள் அனைத்தும் இருக்கிறது என்று ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் அந்த துளசிச் செடியின் மண்ணை ஒரு சிட்டிகை அளவு மட்டும் எடுத்து நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் அனைத்து விதமான தீர்த்தங்களிலும் நீராடுவதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும்.

இதனுடன் இரண்டு சொட்டு பால், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இவற்றை நாம் குளிக்கும் தண்ணீரில் சேர்த்து தினமும் குளித்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நாம் குளித்து வந்தாலே நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதை நம்மால் உணர முடியும். புதிய அணுகு முறையில் அந்தப் பிரச்சினைகளை சமாளித்து வெளியே வந்து விடுவோம். துளசியின் மண்ணை குளிக்காமல் எடுக்கக்கூடாது. வேறு யாராவது வீட்டில் குளித்து இருந்தால் அவர்களை எடுத்து கொடுக்க சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நல்ல மாற்றங்கள் ஏற்பட முருகன் மந்திரம்

மிகவும் புனிதமான செடியாக கருதக்கூடிய துளசியின் மண்ணும் மிகவும் புனிதமானது என்பதை மனதார உணர்ந்து முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

- Advertisement -