பதவி உயர்வு கிடைக்க தொழிலில் லாபம் பெற இந்த மாலையை இறைவனுக்கு சாற்றி வழிபடுங்கள்

arasailai
- Advertisement -

ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கும் பணம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக ஒரு சிலர் ஏதேனும் கம்பெனிகளிலும் அல்லது சொந்தமாக சிறுதொழில் நடத்தியும் பணத்தை சம்பாதித்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததென்றால் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கும் சிரமமாகிவிடும். ஏனென்றால் நாளுக்கு நாள் விலைவாசி என்பது ஏறிக் கொண்டேதான் செல்கிறது. எனவே நாம் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், தொழிலில் லாபம் பெறவும் அரச மரத்தின் இலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

பட்டப்படிப்பு படித்து முடித்து பல கனவுகளோடு உலக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வேலை என்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது. பல போராட்டங்களுக்குப் பிறகே அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதுவும் தான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு வேலையைத் தேடி அதனை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கிறார்கள். இவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி கிடைப்பது என்பதே இவ்வுலகத்தில் போராட்டமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

அவ்வாறு நம் கையில் கிடைத்த வேலையை சரியாக செய்து அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கும். ஆனால் நாம் நினைக்கின்ற அளவிற்கு இவ்வாறான விஷயங்கள் எளிதில் நடப்பதில்லை. எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், உண்மையாக செயல்பட்டாலும் நமது உழைப்பிற்கான பலன் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

job

எனவே வேலையை விடுத்து ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம் என்று நினைப்பவர்களுக்கும் தான் எடுத்த தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பலவிதச் சரிவுகளை காண நேரிடும். இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும், இவற்றை சரி செய்யவும் அரச மரத்தின் இலையை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெற்றிடலாம்.

- Advertisement -

அரச மரத்தின் இலைகளை நூற்றி ஓரு எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு அதில் கருப்பு நிறத்தைத் தவிர மற்ற ஏதேனும் நிறத்தில் உள்ள பேனாவை வைத்து நீங்கள் நினைத்த காரியத்தை எழுத வேண்டும். அதாவது உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் அதனை மட்டும் நூற்றி ஓரு இலைகளிலும் உங்கள் கைப்பட எழுத வேண்டும். பின்னர் அந்த இலைகளை சுருட்டி மாலையாக கட்டிக்கொள்ள வேண்டும்.

arasa-ilai

இந்த மாலையை உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு அல்லது குலதெய்வத்திற்கு அணிவித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் தொழில் அல்லது வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

dhupam

அத்துடன் இந்த அரச இலைகளை பறித்து வந்து நன்றாக காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதனுடன் மருதாணி விதைகளையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொண்டு இவற்றை சாம்பிராணி பவுடருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த சாம்பிராணி கலவையை வீட்டில் தூபம் போடும் பொழுது அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் ஐஸ்வர்யம் உண்டாகி நீங்கள் நினைத்தது விரைவாக நடந்து விடும்.

- Advertisement -