மகாலட்சுமி நித்திய வாசம் செய்ய வழிமுறைகள்

mahalakshmi things
- Advertisement -

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தரக்கூடிய அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர்தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் பணம், நகை சேரும் என்பது மட்டும் அல்லாமல் தைரியம், வீரம், சந்தானம், கலைகள், தானியங்கள் என்று அஷ்ட செல்வங்களையும் அள்ளித் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நம் வீட்டில் நித்தியவாசம் செய்வதற்கு செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தாயார் நிலையாக ஒருவருடைய இல்லத்தில் நிலைத்திருப்பார் என்று நினைக்கக் கூடாது. அஷ்ட லட்சுமிகளின் அருளை பரிபூரணமாக பெறுபவர்களுடைய இல்லத்தில் தான் மகாலட்சுமி தாயார் குடியிருப்பார். அதேசமயம் மகாலட்சுமி தாயாருக்கு பிடிக்காத ஏதாவது ஒரு சிறிய செயலை செய்தாலும் உடனே வீட்டை விட்டு வெளியேறக்கூடிய தெய்வமாகவும் இதே மகாலட்சுமி தாயார் தான் திகழ்கிறார். இப்படிப்பட்ட மகாலட்சுமி தாயார் நம் வீட்டை விட்டு சென்றாலும் மறுபடியும் திரும்ப நம் வீட்டிற்கு அழைப்பதற்குரிய எளிமையான வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். சுத்தம் இல்லாத வீட்டில் இருக்க மாட்டார். அழுக்குத் துணிகள் நிறைந்த வீட்டில் இருக்க மாட்டார். அழுகுரல் கேட்கும் வீட்டில் இருக்க மாட்டார். சண்டை போடும் வீட்டில் இருக்க மாட்டார். இப்படி சில விஷயங்கள் இருக்கின்றன. என்றாவது ஒருநாள் நாம் இந்த விஷயத்தில் ஏதாவது ஒன்றை செய்தாலும் அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயார் வெளியேறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அனைவரும் அனைத்து நேரத்திலும் சரியாக செயல்பட முடியாது அல்லவா? அந்த சூழ்நிலையில் மறுநாள் மறுபடியும் நாம் செய்த தவறை திருத்திக் கொண்டு மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு எப்படி அழைப்பது என்று பார்ப்போம்.

கண்டிப்பாக முறையில் அனைவரின் இல்லத்திலும் மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகம் இருக்கும். விக்ரகம் வைத்து வழிபடுபவர்கள் சந்தனாதி தைலத்தை வாங்கி மகாலட்சுமி தாயாரின் விக்ரஹத்தில் தடவ வேண்டும். விக்ரகம் இல்லாதவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி தாயாருக்கு சந்தனாதி தைலத்தை வாங்கி எண்ணெய் காப்பு செய்யும் நேரத்தில் தர வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக் கிண்ணம் அல்லது தட்டில் மாதுளம் பழ முத்துக்களை தினமும் காலையில் பூஜை செய்யும் பொழுது நெய்வேத்தியமாக வைத்தால் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் பத்து ரூபாய் அல்லது 100 ரூபாய் இவை இரண்டில் ஏதாவது ஒரு நோட்டை எடுத்து அதை நன்றாக சுருட்டி மஞ்சள் துணியில் வைத்து கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைக்க வேண்டும்.

இப்படி வைக்கும் பொழுது இந்த ரூபாய் நோட்டை தரையில் வைக்காமல் சரியாக மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் இருப்பது போல் சின்ன மனப்பலகை போட்டு அதற்கு மேல் வைக்க வேண்டும். பிறகு தினமும் இந்த ரூபாய் நோட்டிற்கு மல்லிகை பூ, துளசி இலை, குங்குமம், மஞ்சள் என்று இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து மகாலட்சுமி தாயாரின் போற்றிகளையோ அல்லது அஷ்டலட்சுமிகளின் பெயரையோ கூறி அர்ச்சனை செய்வதன் மூலமும் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்குள் அழைக்க முடியும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ மாலையை சுக்கிர ஹோரையில் வாங்கி தருவதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்.

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நித்தியவாசம் புரிவார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முழு நம்பிக்கையுடன் இந்த வழிமுறைகளை பின்பற்றுவோம்.

- Advertisement -