வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

mahalakshmi thambulam
- Advertisement -

நோயற்ற வாழ்வும் நிறைவான செல்வமும் ஏற்பட வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். தேவையற்ற வீண் விரயங்களை தவிர்த்து சேமிப்புகளை அதிகரிக்கவும் வீட்டில் எந்த வித குறையும் இல்லாமல் நிறைவான சுகபோகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். இவை அனைத்தையும் பெற வேண்டும் என்றால் மகாலட்சுமியின் அருள் நமக்கு வேண்டும். லட்சுமி கடாட்சம் நம்முடைய வீட்டில் ஏற்பட்டு விட்டாலே இவை அனைத்தும் நமக்கு கிடைத்துவிடும். அப்படிப்பட்ட லட்சுமி கடாட்சத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெள்ளிக்கிழமை வழிபாடு முறை

மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதனால் தான் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி பூஜையும் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய தினம் மட்டும் அல்லாமல் சுக்கிர பகவானுக்குரிய தினமாகவும் இருப்பதால் அன்றைய தினம் நம் மகாலட்சுமி தாயாரை வழிபட்டோம் என்றால் இவர்கள் இருவரின் அருளையும் நம்மால் பெற முடியும். இவர்களின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைத்து நிம்மதியான சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

ஒருவரை நம்முடைய வீட்டிற்கு விருந்தினராக நாம் அழைத்தோம் என்றால் அவருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து இருப்போம். அவர்கள் வந்து மனமகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் உண்டு மகிழ்ந்து செல்வார்கள். இதே போல் தான் நம் வீட்டிற்கு நாம் மகாலட்சுமியை வரவழைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது மகாலட்சுமி தாயார் மன நிறைவுடன் நமக்கு அனைத்து விதமான செல்வங்களையும் தந்து விடுவார்.

இப்பொழுது அந்த பொருட்களை பற்றி பார்ப்போமா? அந்த பொருட்கள் தான் மல்லிகை பூவும், நெல்லிக்கனியும். மல்லிகை பூவிற்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். அனைத்து தெய்வங்களுக்கும் மல்லிகைப்பூ என்பது மிகவும் விருப்பமான மலராக திகழ்கிறது. குறிப்பாக மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூவே வெள்ளிக்கிழமை தோறும் வைத்து வழிபட செல்வ செழிப்பு உயரும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நெல்லி மரத்தில் மகாலட்சுமி தாயார் வீற்று இருக்கிறார் என்பதாலும் நெல்லிக்கனியில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்து இருக்கிறது என்பதாலும் நெல்லிக்கனியில் தீபம் போடுவதோ நெல்லிக்கனியை வைத்து வழிபடுவதோ மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பொருட்களை நாம் வைத்து வழிபடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும்.

வியாழக்கிழமை அன்று இரவு ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், ஒரு முழம் மல்லிகை பூ, மூன்று நெல்லிக்கனி இவைகளை வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எப்பொழுதும் போல மகாலட்சுமியின் பூஜையை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வந்து லட்சுமி கடாட்சத்தை தருவாள். நெல்லிக்காயை சனிக்கிழமை அன்று எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியை வரவேற்கும் நிலை வாசல்

இந்த வழிமுறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் பற்றி வீட்டில் செய்வதன் மூலம் வீட்டிற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். செல்வ செழிப்பு உயரும்.

- Advertisement -