இந்த ஒரு வேரும் 2 பொருட்களும் இருந்தால் போதும், வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் பணமானம் தானாக வந்து சேரும். மகாலட்சுமி தாயார் அங்கு நிரந்தரமாக வாசம் செய்வாள்

mahalakshmi vasam seiyum porutkal
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் கிடைத்தால் பண நெருக்கடி குறையும், பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும், தொழில் விருத்தி ஆகும். இவை அனைத்தும் நடந்தால் நம் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஆக, குடும்பம் சந்தோஷமாக இருக்க மகாலட்சுமியும் கடாட்சம் தேவை. அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் கடாட்சத்தை பெற ஒரு எளிய பரிகாரத்தை மேற்கொண்டாலே போதும். அந்த பரிகாரம் என்னவென்று இந்த பதிவில் நாம் காண்போம்.

பொதுவாக மகாலட்சுமி தாயார் வாசனை மிகுந்த பொருட்களில் குடியிருப்பவள் என்று கூறப்படுகிறது.
ஆதலால் தான் பண வசியத்திற்கு ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் போன்ற வாசனைப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த வகையில் இன்று நாம் மேற்கொள்ள போகும் பரிகாரத்தின் மூலமாக நம் வீட்டிற்குள் மகாலட்சுமியை வரவழைத்து, அந்த மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற முடியும். அதற்கு தேவையான பொருட்கள் ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் வெட்டிவேர். இந்த மூன்று பொருட்களை வைத்து எப்படி பரிகாரத்தை செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக எல்லா வீடுகளிலும் விடியற்காலை வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. அப்படி நாம் வாசல் தெளித்த பிறகு, கோலம் போடுவதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து, அந்த தண்ணீரில் ஏலக்காய், பச்சை கற்பூரம், வெட்டிவேர் மற்றும் சில நாணயங்கள் (ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று) இரண்டு நாணயங்களை போட்டு அந்த பாத்திரத்தின் மேல் நம்முடைய கையை வைத்து, “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்று 11 முறை உச்சரிக்க வேண்டும்.

உச்சரித்த பிறகு, மகாலட்சுமி தாயாரை நம் மனதார நினைத்து அந்தத் தண்ணீரை வாசலில் தெளித்து விட வேண்டும். பிறகு நாம் எப்போதும் போல் கோலம் போட்டு கொள்ளலாம். மீதம் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரை நாம் செடிகளில் ஊற்றி விடலாம். அந்த நாணயங்களை மட்டும் நாம் திரும்ப எடுத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக நாம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அடிக்கடி கெட்ட கனவுகள் வராமல் இருக்க இதை வீட்டில் செய்தாலே போதும்.

இதே போல் தான் நாம் தொழில் செய்யும் ஸ்தாபனங்களில் இருக்கும் எதிரிகள் அகலவும், மகாலட்சுமி தாயார் அருள் கிடைக்கவும் இதே பரிகாரத்தை நாம் செய்யலாம். தொழில் ஸ்தாபனங்களில் செய்யும் பொழுது அந்தத் தண்ணீரில் மேற்கூறிய 3 பொருட்களோடு சேர்த்து ஒரு எலுமிச்சம் பழத்தையும் போட வேண்டும். அங்கும் அதே போல் வாசலை பெருக்கி விட்டு தண்ணீரை தெளித்து விட வேண்டும். தண்ணீரில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை திருஷ்டிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நாம் தினமும் செய்து வந்தோமேயானால் மகாலட்சுமி தாயார் நமக்கு பரிபூரண அருளை கொடுத்து, நம் வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் வாசம் செய்வாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -