ஒரே ஒரு வெற்றிலையை பீரோவில் இப்படி வைத்தால் போதும். மஹா லட்சுமியின் அருளால் உங்கள் வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.

vetrilai-lakshmi
- Advertisement -

மகாலட்சுமியின் அருளாசியை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. வீட்டில் பண வரவு இருந்தாலும், அந்தப் பணத்திலிருந்து பத்து ரூபாயைக் கூட சேமித்து வைக்க முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர். கையில் காசு பணம் இல்லாதபோது செலவே வராது. கையில் 10 ரூபாய் வந்தாலும் போதும். 100 ரூபாய்க்கு செலவு வரிசை கட்டி நிற்கின்றது. இதற்கு என்னதான் தீர்வு. மகாலட்சுமி நம் கைக்கு பணத்தைக் கொடுப்பதே, செலவு செய்வதற்காக தானே. முதலில் வரக்கூடிய வருமானத்தை அப்படியே செலவே செய்யாமல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து விட வேண்டும்.

வருமானத்தில் ஒரு பகுதி கட்டாயம் சேமிக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் சில பேர் உள்ளார்கள். கைக்கு வரக்கூடிய வருமானத்தை செலவே செய்ய கூடாது. அப்படியே பணத்தை பதுக்கி சேர்க்க வேண்டும். சீக்கிரத்தில் பணக்காரர் ஆகி விட வேண்டும், என்ற எண்ணம் இருக்கும். இப்படிப்பட்டவர்களிடத்தில் நிச்சயமாக ஒரு ரூபாய் கூட தங்காது, வருமானத்துக்கு மீறிய செலவு தான் வரும்.

- Advertisement -

வரக்கூடிய வருமானத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வருமானத்திற்குள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்த கூடிய திறமை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்க வேண்டும். வருமானத்தில் வீட்டு செலவையும் பார்த்துவிட்டு, அதிலேயே மிச்சம் பிடிக்கக்கூடிய திறமை கொண்ட பெண்கள் இருக்கக்கூடிய வீடு மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய வீடுதான்.

சில வீடுகளில் வருமானத்திற்கு மேல் செலவு செய்வார்கள். போதாத குறைக்கு, மாத இறுதியில் கடன் வாங்கி செலவு செய்வார்கள். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரவே கூடாது. கடன் வாங்குவதை எந்த வீட்டில் பாவம் என்று கருதுகிறார்களோ, கடன் வாங்கினால் கஷ்டம் வரும் என்று எந்த வீட்டில் இருப்பவர்கள் நினைக்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது.

- Advertisement -

அதற்காக உயிர் போகும் அவசரத்தில் கூட கடன் வாங்காமல் இருக்க முடியாது. அவசரத்தேவை, மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. அத்தியாவசியமாக சில தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும் அப்போது கடன் வாங்குவதில் ஒன்றும் தவறு கிடையாது. அப்போதும் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வறுமையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நீங்கள் மேல் சொன்ன விஷயங்களை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அதன்பிறகு ஒரு சிறிய வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதில் கிராம்பு 3, மருதாணி விதை சிறிதளவு, சிறிய வசம்பு துண்டு 1, இந்த மூன்று பொருட்களையும் வைத்து வெற்றிலையை சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

மகாலட்சுமி நினைத்து இந்த வெற்றிலை மூட்டையை உங்கள் பீரோவில் வைத்தால் வீட்டில் தங்குதடையற்ற பணப்புழக்கம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பீரோவில் வைத்த பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் இருக்கும். வெற்றிலை கிராம்பு மருதாணி விதை வசம்பு இந்த நான்கு பொருட்களும் ஒன்றாக சேரும் போது அபரிவிதமான பண வசிய சக்தி ஏற்படும். வாரத்தில் ஒருநாள் வெற்றிலையை மட்டும் மாற்றி வைக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -