அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சரி, அதை சுலபமாக செய்து விடலாம். மன அழுத்தமே வராது. உங்கள் கழுத்தில் இதை மட்டும் கட்டிக்கொள்ளுங்கள் போதும்.

thayathu
- Advertisement -

அவசர அவசரமாக அனைவரும் ஓடி ஓடி வேலை செய்யும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் 24 மணி நேரம் போதுமானதாக அமையவில்லை. ஒருநாளைக்கு இன்னும் சில மணி நேரங்கள் கூடுதலாக இருந்தால் கூட பரவாயில்லை. வேலை செய்வதற்கு நேரமில்லை. பிரஷர் பிரஷர் பிரஷர். தலைவலி, மன அழுத்தம், இதனாலேயே பல நோய் நொடிகள் நம் உடலை சீக்கிரம் தாக்குகின்றது. இந்த மன அழுத்தத்தை குறைக்க ஆன்மீக ரீதியாக மிக மிக மிக சுலபமான ஒரு வழி உள்ளது.

thayathu

அந்த சுலபமான வழியை உங்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கான பதிவு தான் இது. 3 பொருள், ஒரே ஒரு வெள்ளி தாயத்து இருந்தால் போதுமே, உங்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு. உங்கள் மனது ரிலாக்ஸ் ஆகும். உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் அமையும். நீங்கள் எப்போதும் அமைதியான சூழ்நிலையில் இருப்பீர்கள். ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த தாயத்தை தயார் செய்து அணிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தாயத்து தயார் செய்ய தேவையான மூன்று பொருட்கள். கிராம்பு 1, வெட்டிவேர் சிறிய துண்டு, 1 ஏலக்காய்க்கு உள்ளே இருக்கக்கூடிய விதைகள் மட்டும் போதும். இதில் கிராம்பை பொடி செய்தும் பயன் படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. வெள்ளி தாயத்தை தவிர மத்த தாயத்துகளில் இந்த மூன்று பொருட்களை போட்டு நாம் பயன்படுத்தினால் அதன் மூலம் நமக்கு அதிக பயன் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கொஞ்சம் காசு கொடுத்து சிறிய அளவில் இருக்கும் வெள்ளி தாயத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

krambu

ஒரு வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, தாயத்தில் மேல் சொன்ன மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு சிகப்பு கயிறு கட்டி பூஜை அறையில் வைத்து விட்டு, குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இந்த தாயத்தை கையிலும் கட்டிக்கொள்ளலாம். கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த தாயத்து உங்கள் உடம்பில் இருக்கும் வரை உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படாது. வேலை செய்யும் போது மன அழுத்தம் இருக்காது. எப்போதும் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த 3 பொருட்கள்தான் இவை.

vetti-ver0

தனியாக இந்த சிவப்பு கயிறு கழுத்தில் கட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், நீங்கள் அணிந்திருக்கும் சைனில் உள்பக்கம் சிறிய சிவப்பு கரையில் முடிச்சுப் போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. அதன் மூலம் எந்த தவறும் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் முதல் பெண்கள் வரை இதை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கே, இறுக்கமான வாழ்க்கையில் நிறைய வித்தியாசங்களை உணரமுடியும். மனசு லேசாவதை உணர்வீர்கள். நம்பிக்கை இருந்தால் மட்டுமே செய்து பார்த்து, நல்ல பலனை பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -