மனக்குழப்பத்திற்கு உடனடியாக ஒரு தெளிவைத் தரும் எலுமிச்சை பழ பரிகாரம். முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரும்போது இப்படி செய்து பாருங்கள்.

lemon-murugan
- Advertisement -

மனிதர்களுடைய மனது அடிக்கடி சஞ்சலத்தில் முழுகுவது இயல்புதான். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் ஒரு குழப்பம். ஒரு தெளிவு இருக்காது. நம்முடைய வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்று ஆராய்ச்சி செய்து பார்த்து அதில் ஒரு நல்ல முடிவை எடுக்கும் அளவிற்கு நமக்கு திறமையும் இருக்காது. நமக்கு எது நல்லது என்று அடுத்தவர்களிடம் போய் கேட்டால் நிச்சயமாக நமக்கு எதிர்மறையான ஒரு பதிலைத் தான் சொல்லுவார்கள். பிரச்சனைகளுக்கு குழப்பத்திற்கு தீர்வு காண என்னதான் செய்வது. இறைவனின் பாதங்களை சரணடைவது தான் ஒரே வழி. இறை நம்பிக்கை உள்ளவர்கள் குழப்பமான தருணங்களில் பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் போது, அதற்கு உண்டான தீர்வை தரும் அதி அற்புதமான ஒரு பரிகார முறையை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

sad

வீட்டை முதலில் சுத்தம் செய்துவிடுங்கள். வீடு முழுவதும் வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். பூஜை அறையை அலங்காரம் செய்து வைத்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். சுவாமியைப் பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கைகளில் வலது உள்ளங் கைகளில் ஒரு எலுமிச்சம்பழம், ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாகத்தான் உங்கள் மனது குழப்பத்தோடு இருக்கிறது. அந்த ஒரு கஷ்டத்தை மட்டும் இறைவனிடம் சொல்லி, அந்த ஒரு கஷ்ட்டத்திற்கான தீவினை, அந்த ஒரு குழப்பத்திற்கான விடையினை ‘இறைவனான நீ தான் கட்டாயம் தர வேண்டும்’ என்று மனதார சொல்லுங்கள். வாய்விட்டு சொன்னாலும் தவறு கிடையாது.

lemon

எவ்வளவு பெரிய, எப்பேர்பட்ட சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் சரி, முடிந்தவரை அந்த பிரச்சனையை வாய் விட்டுச் சொல்லி உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தையும் ஒரு ரூபாய் நாணயத்தை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி அப்படியே உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்கள் பூஜை அறையில் நிறைய தெய்வங்களின் படம் இருக்கும். அதில் ஒன்று உங்கள் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். அப்படி எதுவுமே இல்லை என்றால், விநாயகரின் திருவுருவ படத்திற்கு முன்பாக இந்த ஒரு ரூபாயையும் எலுமிச்சம் பழத்தையும் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மூன்று நாட்கள் இந்த பழமும் அந்த 1 ரூபாய் நாணயமும் அப்படியே இருக்கட்டும். இதற்குள் நிச்சயமாக உங்களுடைய குழப்பத்திற்கு ஒரு தீர்வினை ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த ஆண்டவன் காட்டியிருப்பார். பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தாலும் சரி, விதியின் காரணமாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் சரி, நீங்கள் வைத்த அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அங்கு இருக்கும் மரத்தடியில் அல்லது கோவிலில் ஓரமாக எலுமிச்சம் பழத்தை போட்டு விடுங்கள். ஒரு ரூபாயை அந்த கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

god-photo-frames

மூன்று நாட்களில் உங்களுடைய குழப்பத்திற்கு தீர்வு கிடைத்திருந்தால் இந்த பரிகாரத்தை மீண்டும் செய்ய வேண்டாம். தீர்வு கிடைப்பதில் தாமதம் இருந்தால் மீண்டும் தீர்வு கிடைக்கும் வரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மேல் சொன்ன பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்கள் பிரச்சனைக்கு உண்டான தீவினை அந்த ஆண்டவன் காட்டிக் கொடுப்பான் என்பது தான் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -