திருமாங்கல்ய சரடுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து கட்டிக் கொண்டால் போதும். மனைவி, கணவரின் அன்பை சுலபமாக பெற்றுவிடலாம். பிறகு மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.

couple-thaali
- Advertisement -

திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண்ணினுடையை தலையெழுத்தை நிர்ணயிப்பது அவளுடைய கணவன் தான். காரணம் அவளுடைய வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளப் போவது வாழ்க்கை துணை தான். ஒரு பெண்ணுக்கு கணவன் சரியாக அமைந்து விட்டால் போதும். வாழ்க்கையில் வேறு எதுவுமே தேவையில்லை. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதிலிருந்து அந்த பெண் சுலபமாக வெளியே வந்து விடுவாள். அதுவே கணவன் சரியாக அமையவில்லை எனும் பட்சத்தில் அவளால் தன்னுடைய வீட்டு வாசலில் இருந்து கூட வெளியே வர முடியாது. மனைவியின் முன்னேற்றத்திற்கு கணவனை தடையாக இருந்து முட்டுக்கட்டை போட்டால் என்னதான் செய்வது.

fight

என்னதான் பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண்களுக்கு உரிமை கிடைத்துவிட்டது, சமபங்கு கிடைத்துவிட்டது, நியாயம் கிடைத்து விட்டது, என்று சொன்னாலும்கூட இன்றளவும் நிறைய பெண்கள் தங்களுடைய கணவனிடம் அடிமையாக தான் உள்ளார்கள். மனைவியிடம் உண்மையாக இல்லாத அன்பு காட்டாத கணவன்மார்களை,  மனைவிமார்கள் தங்களுடைய வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் தங்களுடைய தாலி சரடில் எந்த பொருளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

- Advertisement -

மனைவிமார்கள் தங்களுடைய தாலி சரடு கோர்த்துக்கொள்ள வேண்டிய பொருள் என்னவென்றால் அது வசம்பு. இந்த வசம்புவுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உள்ளது. நாம் எதை நினைத்து இந்த வசம்பை கையில் தொட்டு வேண்டிக்கொள்கின்றோமோ, அது நம்முடைய வசமாகிவிடும்.

கடையிலிருந்து பேரம் பேசாமல் ஒரு வசம்புப் துண்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து, அந்த வசம்பின் மேலே மஞ்சளை பூசிக் கொள்ள வேண்டும். அந்த வசம்பை ஒரு மஞ்சள் நூலால் கட்டி உங்களுடைய தாலி சரடுடன் சேர்த்து கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலையில் பூஜை அறையில் சாமி கும்பிடும் போதும் உங்களுடைய திருமாங்கல்யத்தில் இருக்கும் வசம்புபை அப்படியே உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து, உங்களுடைய குலதெய்வத்தை மனதார வேண்டி உங்கள் கணவர் உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். உங்களை புரிந்து கொண்டு வாழவேண்டும். உங்களோடு அன்பு காட்ட வேண்டும். என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

mangalyam1

அதாவது உங்களுடைய கணவரிடம் இருக்கும் எந்த கெட்ட பழக்கம் அவரைவிட்டு நீங்க வேண்டுமோ, அதை நினைத்து வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே நடக்கும். நீங்கள் உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து உங்கள் கணவரோடு சேர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயமாக சீக்கிரத்திலேயே நிறைவேறிவிடும்.

mangalyam

தாலி சரடுடன் சேர்த்து கட்டி வைத்திருக்கும் வசம்பை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். பிரிந்த உங்கள் கணவர் உங்களோடு சீக்கிரமே வந்து சேர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -