மனசுக்கு பிடித்த நல்ல வேலை கிடைக்க விநாயகருக்கு இந்தப் பூவைப் போட்டு வழிபாடு செய்தாலே போதும். நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை நிச்சயம் கிடைக்கும்.

pillaiyar-prayer
- Advertisement -

மனதுக்குப் பிடித்த வேலையாக கிடைக்க வேண்டும். நல்ல வேலையாக இருக்கவேண்டும். கைநிறைய வருமானம் இருக்க வேண்டும். முடிந்தால் அந்த வேலை அரசாங்க உத்தியோகம் ஆக இருக்க வேண்டும்‌. இத்தனை தேவைகள் நமக்குள் இருக்கின்றது. வீட்டிலேயே அமர்ந்து கொண்டு எந்த முயற்சியையும் எடுக்காமல் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் மட்டும் வைத்தால் நிச்சயமாக ஒரு பிரயோஜனமும் இருக்காது‌. நல்ல வேலை கிடைக்க முதலில் உங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். விடாமுயற்சி இருக்க வேண்டும். குறிக்கோளில் நிலையாக நிற்க வேண்டும். இந்த நான்கு விஷயங்களையும் மனதில் நிலை நிறுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலை நிரந்தரமாக கிடைக்கும்.

sembaruthi

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இது பொதுவாக எல்லோரும் சொல்லக் கூடிய ஒரு விஷயம் தான். இது தவிர இந்த நான்கையும் செய்து நல்ல வேலை கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் ஆன்மீக ரீதியாக நாம் என்ன பரிகாரம் செய்யலாம். ஏனென்றால், வேலை கிடைப்பதற்கு ஜாதக ரீதியாக ஏதேனும் தடை இருந்தாலோ, கர்மவினைகள் காரணமாக இருந்தாலும் அதை சரி, செய்வதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்வதும் நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -

முதலில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் சூரியன் வழிபாடு மிக மிக அவசியம். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காலை 6 மணிக்கு சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லி இந்த சூரிய நமஸ்காரம் செய்வது அறிவாற்றலை வளர்ப்பதற்கு ஒரு நல்ல வழிபாடு முறையாக சொல்லப்பட்டுள்ளது.

sury

அடுத்தபடியாக விநாயகர் வழிபாட்டிற்கு வருவோம். தினம்தோறும் விநாயகருக்கு வீட்டில் இருந்தபடியோ அல்லது கோவிலுக்கு சென்றோ சிவப்பு மலர்களை சாத்தி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்பூ கிடைத்தாலும் பரவாயில்லை. ரோஜாப் பூ கிடைத்தாலும் பரவாயில்லை. அதை கொண்டு போய் நம்பிக்கையோடு விநாயகருக்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு வழிபாடு செய்யவேண்டும். தினம்தோறும் விடாமல் இதை செய்யுங்கள். நல்ல வேலை கிடைக்கும் வரை.

- Advertisement -

அடுத்து மாதம் தோறும் சங்கடஹரசதுர்த்தி வரும். அந்த சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒரு வாழை இலையில் 2 கைப்பிடி கோதுமையை போட்டு பரப்பி, அதன் மேல் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சிகப்பு திரி போட்டு விநாயகப் பெருமானிடம் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கூடுமானவரை மூன்றுமாதம் சங்கடஹர சதுர்த்திக்கு முழு நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு அரசாங்க வேலையோ தனியார் வேலையோ, ஆக மொத்தத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது உறுதி. நீங்கள் எந்த வேலைக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த வேலை உங்களுக்கு நிச்சயமாக கிடைத்துவிடும்.

arugampul-vinayagar

ஒருவேளை பரிகாரங்கள் செய்தும் வேலை கிடைக்காத பட்சத்தில் இதோடு வழிபாட்டையும் நிறுத்திவிடாதீர்கள். உங்களுடைய வேலை தேடும் முயற்சியையும் விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்ய நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் நல்ல வேலையை அந்த ஆண்டவன் உங்களுக்கு காண்பித்து தருவான். நம்முடைய தனிப்பட்ட ஜாதகம் என்ற ஒன்றும் இருக்கிறது அல்லவா. மேல் சொன்ன பரிகாரத்தை செய்தும் உங்களுக்கு பலன் இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் உங்களுடைய ஜாதகத்தை காண்பித்து பரிகாரம் செய்து கொள்வது நன்மை தரும்.

- Advertisement -