நான் தனியாக சிரிக்கையில்
என்னை பைத்தியம் என்று
பலரும் கிண்டல் செய்வதுண்டு..
அவர்களுக்கென்ன தெரியும்
என் மனதில் உன்னோடு நான்
கொஞ்சி விளையாடி
சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று.
இதையும் படிக்கலாமே:
எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே ரசிக்கும் பழக்கமும் அதிகம் இருக்கும். எதற்காக சிரிக்கிறார்கள் என்ற தெரியாது. தொலைபேசியில் என்ன பேசுகிறார்கள் என்றும் தெரியாது. மணி கணக்காய் உரையாடல், மனம் முழுக்க காதல் பூக்கள்.
காதலிர்க்க ஒருவர் ஆரமித்து உடன் நண்பர்கள் கூட அவர்களுக்கு தொந்தரவாக தெரிவார்கள். மாயங்கள் பல செய்யும் காதல் வலையில் விழுந்த எவராலும் அவ்வளவு எளிதில் எழ முடியாது. ஒன்று நாம் சிரித்துக்கொண்டிருப்போம் அல்லது மற்றவர்கள் நம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்கள். இது தான் காதல் செய்யும் லீலை.
நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.