மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளை ஒரு பேப்பரில் எழுதி இந்த பையில் வைத்து விடுங்கள். நீங்கள் நினைத்தது அப்படியே உடனே நடந்து விடும்.

manjalpai
- Advertisement -

இன்றைய நாகரீக காலகட்டத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் மாற்றி விட்டோம். சிலவற்றை நாம் மறந்தே விட்டோம். ஆனாலும் இன்னும் நம் பழமையின் அடையாளமாக விளங்குகிறது இந்த மஞ்சள் பை. அதை தான் நாம் யாரும் உபயோகிப்பதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். யாரும் உபயோகப்படுத்தவில்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. இந்த மஞ்சள் பையின் மகத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள் இன்றளவும் மஞ்சள் பையே உபயோகிக்கிறார்கள். இன்றளவும் கோவில்களில் பிரசாதங்களை அனுப்பும் போது மஞ்சள் பையில் போட்டு தான் அனுப்புவார்கள். இதை நீங்கள் கவனத்து இருப்பீர்கள். ஏனென்றால் மஞ்சள் என்றாலே அதற்கு மங்களம் என்று தான் பொருள். நம் வீட்டிற்கு மங்களங்களை தேடி வந்து, தேடித் தரும் பொருள் தான் இந்த மஞ்சள் பை.

முன்பெல்லாம் நம் வீட்டு பெரியவர்கள் பணம், நகை, பத்திரம், என எதுவாக இருந்தாலும் மஞ்சள் பையில் தான் எடுத்து செல்வார்கள், அதற்கு காரணம் மஞ்சள் பையில் நாம் வைத்து பயன்படுத்தும் எந்த பொருளும் மேலும், மேலும் நமக்கு பெருகி நம் வாழ்வில் மங்களங்களைத் தரும் என்பதாலே. அந்த காலத்தில் மஞ்சள் பையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் இன்றளவும் சில வீடுகளில் திருமண பத்திரிக்கை அடிக்கும் போது ஒரு கணிசமான அளவு பத்திரிகைகளை இந்த மஞ்சள் நிறம் கலந்த பத்திரிக்கையாக அடித்து அதை தான் குலதெய்வத்திற்கும் மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபடுவார்கள். திருமணங்களில் கூட தேங்காய், சாத்துக்குடி, போன்றவைகளை மஞ்சள் பையில் தான் போட்டு தருவார்கள்.

ஆனால் இன்றைய நாகரிக காலத்தில் மஞ்சள் பையை கொண்டு செல்பவர்களை ஏளனமாக பார்க்கும் பார்வை வந்து விட்டது. மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வந்தாலே பட்டிக்காட்டான், ஊர் நாட்டான் என ஏளனங்களை பேசுவதால், மஞ்சள் பையை உபயோகிப்பது அவமானமாக கருதி இப்போதெல்லாம் அதை யாரும் தொடுவது கூட இல்லை. சரி இந்த மஞ்சள் பையை உபயோகப்படுத்தி  நம் வாழ்வில் மங்களங்களை எப்படி பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

உங்கள் வீட்டில் திருமண வயது உள்ளவர்களுக்கு வரன் பார்க்கும் போது, சிலருக்கு அந்த வரன்கள் தட்டிக் கொண்டே போகும். அது போன்ற சமயங்களில் ஜாதகத்தை இந்த மஞ்சள் பையில் எடுத்து வைத்து விடுங்கள். அதே போல் ஜாதகம் பார்க்க போகும் போது இந்த மஞ்சள் பையில் வைத்து எடுத்து சொல்லுங்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணமும் விரைவில் நடக்கும். இதே போல் நீங்கள் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், தற்போது கையில் இருக்கும் நிலத்தின் பத்திரத்தை (அது வேறு நிலத்தின் பத்திரமாக கூட இருக்கலாம், ஆனால் அது உங்களுடையதாக இருக்க வேண்டும்.) மஞ்சள் பையில் வைத்து விடுங்கள். வாங்கிய நிலத்தில் வீடு கட்ட வேண்டுமா? அப்போது அந்த நிலத்துக்கான பத்திரத்தை அதில் வைத்து விடுங்கள். பிள்ளைகள் படிப்பில் உயர வேண்டுமானால், அவர்களின் ஜாதகங்களையும் இது போல் வைத்து விடுங்கள்.

எந்த சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்று நினைத்து இந்த பையில் வைக்கிறீர்களோ அது நிச்சயமாக நடக்கும் என்பது தான் இந்த மஞ்சள் பையின் மகிமை. நீங்கள் உபயோகிக்கும் நகை, பணம், என எதுவாக இருந்தாலும் இந்த மஞ்சள் பையில் வைத்தால், அது மேலும் மேலும் பெருகி நம் வீட்டை மங்களகரமான வீடாக மாற்றி விடும்.

எங்களிடம் நகையோ, பணமோ, பத்திரமோ, எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எது வேண்டுமோ, அதாவது உங்களுக்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டுமா? சொந்தமாக உள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டுமா? உங்கள் குழந்தைகளுக்கு படிப்பில் முன்னேற்றம் வேண்டுமா? உங்களுடைய ஆசைகள் என்னவோ அதை ஒரு நோட்டில் 11 முறையோ 21 முறையோ 108 இப்படி ஒரு எண்ணிக்கையில் எழுதி அந்த நோட்டை மஞ்சள் பையில் வைத்து விடுங்கள். நிச்சயம் பலிக்கும். இந்த மஞ்சள் பையை மகிமையை உணர்ந்து இனி அனைவருமே உபயோகிக்க ஆரம்பித்து அவரவர் வாழ்வில் மங்களங்கள் தொடர்ந்து பெறுங்கள்.

- Advertisement -