ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்

lord-muruga1
- Advertisement -

முருகனையே எப்போதும் சிந்தையில் நிறுத்தி, தன் உடலில் கடைசி மூச்சி இருக்கும் வரை ஒரு சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார். அவர் திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரை குடிகொண்டுள்ள முருகப்பெருமானை போற்றும் வகையில், ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை நாளுக்கு ஒரு பாடல் என ஏழு பாடல்களை தந்தருளியுள்ளார். இதை படைவீட்டு வாரப்பாடல்கள் என்றும் கூறுவதுண்டு. இந்த பாடலை கூறுவதன் மூலம் வாழ்வில் நிச்சயம் ஏற்றத்தை பெறலாம். ஒவ்வொரு நாளுக்குரிய பாடல் இதோ.

oom

ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

- Advertisement -

திங்கட்கிழமை

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

- Advertisement -

murugan

செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

- Advertisement -

புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

murugan

வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

இதையும் படிக்கலாமே:
ஆறுவித பலன்களை தரும் முருகனின் சரவணபவ மந்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -