திடீர்னு பார்ட்டிக்கு இல்லன்னா வெளிய போறீங்களா? 10 நிமிடத்தில் பார்லருக்கு போனது போல முகம் தங்கமென பளிச்சிட இந்த 2 பொருள் போதுமே!

face-honey-milk
- Advertisement -

எல்லா நேரமும் முன்கூட்டியே திட்டமிடுவது என்பது முடியாத காரியம். ஒரு சில சமயங்களில் திடீரென வெளியே கிளம்ப வேண்டி இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அவசர அவசரமாக நம்முடைய முகத்திற்கு ஒரு க்லோயிங் அல்லது புத்துணர்ச்சி கொடுப்பது என்பது சிரமமான காரியமாக இருக்கும். நம்முடைய முகம் பளிச்சென இருந்தால் தான், நாம் போகும் இடங்களில் நமக்கு ஒரு கௌரவமும், தன்னம்பிக்கையும் அதிகரித்து காணப்படும். இது போன்ற அவசர சமயங்களில் கை கொடுக்கக் கூடிய இந்த ரெண்டு பொருட்கள் உங்களிடம் இருக்கிறதா? இதை வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகம் இன்ஸ்டன்ட் ஆக பளிச்சென மாற வைக்கக்கூடிய அற்புதமான சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு. இது சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான். இந்த பொருளுக்குள் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? என்றாலே நமக்கு வியப்பாக இருக்கும். அப்படியான ஒரு பொருள் தான் பால்! பால் எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இந்த பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இத்தகைய பாலை காய்ச்சியதோ அல்லது காய்ச்சாமலோ கூட முகத்திற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

நீங்கள் திடீரென வெளியில் கிளம்ப வேண்டும் எனும் பொழுது முகத்தை ஒரு முறை பாலால் தேய்த்து உலர வைக்க வேண்டும். இதற்கு ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சி ஆற வைத்த பாலாக இருந்தாலும் நன்றாக இருக்கும் அல்லது பிரிட்ஜில் இருந்து பிரஷ் ஆன பால் எடுத்து நீங்கள் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. பஞ்சால் அதை முழுமையாக நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பஞ்சை தொட்டு தொட்டு முகம் முழுவதும் வையுங்கள். பால் எல்லா இடங்களிலும் படர வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடம் அப்படியே உலர விட்டு விட்டால் முகத்தில் இருக்கும் டெட் செல்கள், மாசு, அழுக்கு, தூசு போன்றவை அனைத்தும் நீங்கிவிடும். அதன் பின்பு சுத்தமான காட்டன் துணி ஒன்றை ஈரப்படுத்தி அதை முகத்தை துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். முகத்தை தண்ணீரால் கழுவ நேரடியாக கழுவ கூடாது. துடைத்து எடுத்த பின்பு இந்த இரண்டாவது பொருளை இப்போது நீங்கள் முகத்திற்கு பூச வேண்டும்.

- Advertisement -

சுத்தமான மனுகா தேன் இந்த மனுகா தேனில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஆன்டி ஏஜிங் ப்ராப்பர்ட்டீஸ் நிறைந்துள்ளது. இதை முகத்தில் ஒருமுறை தடவினால் அப்படி ஒரு தேஜஸ் முகத்திற்கு கிடைக்கும். முக துவாரங்களுக்குள் இருக்கும் பாக்டீரியாக்களை கூட நீக்கி, முகத்தை இன்ஸ்டன்ட் ஆக பொலிவுர செய்யக்கூடிய அத்தனை சத்துக்களும் மனுகா தேனுக்கு உண்டு. சருமத்தில் இருக்கும் பிஹெச் லெவலை சமன்படுத்தி முகப்பருக்களை அண்ட விடாமல் பாதுகாக்கும் சக்தி கொண்டுள்ளது.

மனுகா என்பது ஒரு வகையான மரம் ஆகும். இது நியூசிலாந்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தில் இருக்கும் பூவிலிருந்து எடுக்கக்கூடிய இந்த தேன், அதி சிறந்த சத்துக்களை தன்னில் அடக்கி உள்ளது. இது உலகம் முழுவதும் இன்று பரவலாக காணப்படுகிறது. இதை ஒரு முறை நீங்கள் முகத்தில் தேய்த்து உலர விட்டு ஈர துணியால் துடைத்து எடுத்தால் போதும், முகம் பார்லருக்கு செல்லாமலேயே பேசியல் செய்தது போல பளிச்சுன்னு இருக்கும்.

- Advertisement -