லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

pournami
- Advertisement -

இன்று மார்கழி மாத நிறைந்த பௌர்ணமி நாள். இன்றைய தினம் நேர்மறை சக்தியானது இந்த பூமியில் நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் எந்த வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும். உங்களுடைய குடும்பத்தில் பணத்தால் எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையை சரி செய்து கொள்ள இன்றைய நாள், உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட நல்ல ஒரு வாய்ப்பு.

நல்ல வேலை கிடைக்கவில்லை, நல்ல வருமானம் இல்லை, நிறைய கடன் வாங்கி திருப்பி தர முடியாத சூழ்நிலை, நகைகள் அடமானத்தில் இருக்கிறது, குடும்பத்தை நடத்தவே வருமானம் இல்லை, என்று எவ்வளவு பெரிய பணக்கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பிரச்சினையில் இருந்து விடுபட இன்று மாலை சந்திரனைப் பார்த்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் மட்டும் போதும்.

- Advertisement -

உங்கள் பண கஷ்டத்தை தீர்க்க, இந்த பிரபஞ்சம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும். இன்று மாலை நிலவைப் பார்த்து சொல்ல வேண்டிய அந்த மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பணக்கஷ்டம் தீர சொல்ல வேண்டிய சந்திர மந்திரம்

இன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். சந்திர பகவானை நினைத்து ஐந்து நிமிடம் பூஜை அறையில் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் ஏதாவது குழப்பம் இருந்தால் கூட அந்த குழப்பத்தை இந்த பௌர்ணமி தினம் தெளிவுபடுத்தி விடும். ஏனென்றால் மனோகாரகன் சந்திரபகவான். தெளிவாக சிந்தித்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்றால் நம்முடைய மனது முதலில் தெளிவாக வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருந்து சந்திர பகவான் உதயம் ஆவதை பார்க்க முடியும், சந்திர நிலவு ஒளி படுமிடத்தில் அமர முடியும் என்றால், மொட்டை மாடி பால்கனி போன்ற இடத்தில் அமர்ந்து சந்திர பகவானே பார்த்து இரு கைகளையும் ஏந்தி, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இன்று மாலை சந்திர பகவானை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்திர லக்ஷ்மியே நமஹ

இதுதாங்க, அந்த லட்சுமி மந்திரம். இன்று மாலை வரக்கூடிய இந்த மார்கழி பௌர்ணமி நேரத்தை யாரும் தவற விடாதிங்க. நம் பண கஷ்டம் தீருவதற்கு இதை விட்டால் வேறு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு, பூஜை அறைக்கு வந்து பூஜை அறையில் சுவாமி படத்திற்கு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பௌர்ணமி நாள் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் உங்களுடைய பண கஷ்டத்தை தீர்த்துக் கொள்ள இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த மந்திரத்தை சொல்லலாம். வெட்ட வெளியில் நிலவைப் பார்த்து அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலிருந்தபடியே பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தையும் சந்திர பகவனையும் லட்சுமி தேவியையும் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -