உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். உங்கள் வீட்டை வாட்டி விதைக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.

amman
- Advertisement -

நம் வாழ்நாளில் நாம் பெரும்பாலான நேரத்தை கழிப்பது நம் வீட்டில் தான். நாம் வசிக்கின்ற வீட்டில் நிம்மதியற்ற சூழல் நிலவினால் நம்மால் எந்த ஒரு காரியத்தையும் சரியாக செய்ய இயலாது. வீடுகளில் நிலவுகின்ற இத்தகைய நிம்மதியற்ற சூழலால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, மன அமைதியின்மை, பொருளாதார கஷ்ட நிலை போன்றவை அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்படக்கூடும். மேற் சொன்ன பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த காயத்திரி மந்திரத்திற்கு உண்டு. அது என்ன மந்திரம்? அந்த மந்திரத்தை எப்படி முறையாக உச்சரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சக்தி வழிபாடு எனப்படும் அம்பாள் வழிபாடு நம் வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும் நீக்க வல்லது. சக்தி எனப்படும் அம்மன் பல வடிவங்களில் பக்தர்களால் வழிபட படுகிறாள். அத்தகைய வடிவங்களில் ஒன்றுதான் “மாரியம்மன்” அந்த மாரியம்மனுக்குரிய காயத்திரி மந்திரம் இதோ.

- Advertisement -

மாரி அம்மன் காயத்ரி மந்திரம்
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி” *ப்ரசோதயாத்!!

மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் வெள்ளி கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, மாரியம்மனுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகையான கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட கேழ்வரகு கூழ் அல்லது தின்பண்டங்களை நைவேத்தியம் வைத்து, ஒரு கைப்பிடி அளவுக்கு குங்குமத்தை எடுத்து, அதை உங்கள் பூஜை அறையில் கீழே பரப்பி, அதன் மீது ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி, மேற் சொன்ன மந்திரத்தை 108 முறை துதித்து வழிபாடு செய்து வர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற தினமும் அவர்கள் காதில் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் போதும்.

இந்த முறையில் மாரியம்மன் வழிபாடு செய்து வருபவர்களுக்கு அவர்கள் இல்லத்தில் இது நாள் வரை ஏற்பட்டிருந்த நிம்மதியற்ற நிலை நீங்கி, மகிழ்ச்சியும் குடும்ப ஒற்றுமையும் மேலோங்கும். நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை, தாமதங்கள் நீங்கி நிறைவேறும். நெடு நாட்களாக உடல் நல பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள், விரைவில் சிறப்பான உடல்நலத்தை பெறுவார்கள். சரியான வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சீக்கிரத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள்.

- Advertisement -