Mokka jokes in Tamil with answers | மொக்க ஜோக்ஸ் தமிழில்

Mokka jokes in Tamil with answers
- Advertisement -

Mokka jokes in Tamil: ஜோக் சொன்னால் சிரிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அதுவே மொக்க ஜோக் சொன்னால் ஆரம்பத்தில் சிரிப்பார்கள் ஆனால் போக போக, போதும் முடியவில்லை நிறுத்து என்பார்கள். இப்படியான ஏராளமாக மொக்கை ஜோக்ஸ் தமிழில் உள்ளது. மாணவர்களுக்கான மொக்கை ஜோக்ஸ், டாக்டர் மொக்கை ஜோக்ஸ் இப்படி பல வகையான மொக்க ஜோக்ஸ் (Mokka jokes in Tamil with answers) இங்க கொடுக்கப்பட்டுள்ளது. படித்தால் நிச்சயம் சிரிப்பு வரும். அதேசமயம் பிறரிடமும் கூறி சிரிப்பிறீர்கள்.

Mokka jokes in Tamil

Mokka jokes in Tamil

மொக்க ஜோக்ஸ் தமிழில்விடை
தீனி போடுறதுக்கு முன்னாடி யானையை அவுத்து விடுங்க!ஏன்?
"யானை கட்டி தீனி போட முடியாது" அதனால தான்.
கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார்! இதிலிருந்து என்ன தெரியுது?கடவுளையும் மனுஷன் வாட்ச்மேன் ஆக்கிட்டானு தெரியுது.
என் பையன் எறும்பு மாதிரி!அவ்ளோ சுறுசுறுப்பா?
அட இல்லைங்க, ஸ்னாக்ச எங்க ஒளிச்சி வைச்சிருந்தாலும் கண்டுபிடித்து எடுத்துடுவான்.
அந்த தாத்தாவை குதிரைக்கு ரொம்ப பிடிக்கும்.அப்படியா! ஏன்?
அவர்தான் "கொள்ளு"த்தாத்தா ஆயிற்றே!
ஏண்டா சைக்கிளை படுக்க வச்சிட்டு போற? அந்த இடத்தில சைக்கிளை நிறுத்த கூடாது என்று போர்டு போட்டிருக்கே நீ பாக்கலையா
இந்தியாவில் எங்கெல்லாம் சணல் கிடைக்கிறது?எல்லா பலசரக்கு கடைகளிலும் கிடைக்கிறது சார்
டேய் பசங்களா! அன்னைனைக்கு நடத்துற பாடத்தை அன்னைனைக்கு படிக்கணும் புரியுதா?ஒரு சந்தேகம் சார்!
ஞாயிற்றுக்கிழமை எந்த பாடத்தை படிக்கிறது?
என் பையன் சரித்திரம் படைசுட்டான்!எப்படி?
சரித்திரப் புத்தகத்தை சாமிகிட்ட வச்சி "படைச்சிட்டான்"
இங்க ஒருத்தன் கழுதை மாறி கத்துகிட்டு இருக்கேன், காது கேட்கலையா?கேட்டது சார் ஆனா கழுதை மாதிரி இல்ல எருமை மாதிரி இருந்தது
சார் எந்த குருவியாவது பணம் சேர்த்து பார்த்து இருக்கீங்களா?இல்ல.
அப்புறம் ஏன் சார் குருவி சேர்க்கிற மாதிரி பணத்தை சேர்க்கணும்னு சொல்றீங்க
தேங்காய் மட்டை இதை திரித்து கூறவும்!கயிறு, சார்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று சொல்லச் சொன்னா ஏன்டா முடியாதுங்கிறா?ஏன்னா எனக்கு எழுத்தறிவித்ததே எல்.கே.ஜி டீச்சர் தான் சார்.
அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியல!எப்படி சொல்ற?
நேத்து 7 யும், 3 யும் கூட்டினா 10னு சொன்னாரு. இன்னைக்கு 5 யையும் 5 யையும் கூட்டினா 10னு சொல்றாரு
படத்தோட பேர பார்த்ததுமே இளஞ்சர்கள் எல்லாம் அடிச்சு பிடிச்சு ஓடி வரணும். அப்படி ஒரு தலைப்பு சொல்லுங்க!"எம்பிளாய்மென்ட் ஆபீஸ்"
எப்போவும் உண்மைய மட்டும் தான் பேசணும். பொய்யே பேசக்கூடாது சரியா. சரி, உன் பெயர் என்ன?பொய்கை வளவன்
கம்ப்யூட்டர் படிச்சா வேலை கிடைக்குமாடா?இல்லடா, நீ படிச்சா தான் உனக்கு வேலை கிடைக்கும்
அந்த காலத்துல வள்ளல்கள் கடை வைத்திருந்தார்களா சார்?இல்லையே ஏன் கேக்குற? பின்ன ஏன் சார் கடை ஏழு வள்ளல்கள்னு சொல்றாங்க
ஒரு தண்ணி தொட்டில காக்கவும் கழுகும் விழுந்திடுச்சு ஆனா கழுகு பறந்துடுச்சி காக்கா பறக்கல ஏன் தெரியுமா? ஏன்?
ஏன்னா காக்கா கரையும்
பிராக்டிகல்கும் தியரிக்கும் என்ன வித்தியாசம்?பிராக்டிகல்னா நாங்க அறுப்போம் தியனா நீங்க அறுத்தவங்க சார்.
ஒரு செல் உயிரி எதுனு கேட்டா ஏண்டா மனிதர்கள்னு எழுதி வச்சிருக்க.மனிதர்கள் தானே சார் இப்ப கையில ஆளுக்கு ஒரு செல்லோட அலையறாங்க.
எதுக்குடா சாக்கு பைய தூக்கிகிட்டு வர?லீவு போடணும்னா ஏதாவது சாக்கு வேணும்னு நீதானடா சொன்ன
டாக்டர் நீங்க தான் என் தெய்வம்அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆப்பரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வம்தான்
முட்டையிடும் உயிரினம் இரண்டு சொல்லு1) கோழி 2) வாத்தியார்
நம்ம பையன் வீட்டில் எங்க காசு வச்சாலும் எடுத்துடறான். என்னங்க பண்றது? அவன் படிக்கிற புக்குல வை தொடக்கூட மாட்டான்
மன்னா பொய் பேசுபவருக்கு 100 கசையடிகள் என அறிவித்தது தப்பா போச்சு.ஏன் மந்திரியாரே?
உங்களை புகழ்ந்து பாட ஒருவரும் வரவில்லையே
எங்க வீட்டு டேபிள் சேர் எல்லாம் பறக்கும் தெரியுமா?எப்புட்றா?
ஏன்னா எல்லாமே பிளைவுட்ல செஞ்சது.
உங்க நாடி ஒரே சீராக வாட்ச் மாறி ஓடுது.டாக்டர் நீங்க பிடிச்சு இருக்கிறதே என் வாட்ச் தான்
மன்னர் அவருடைய கால்களுக்கு அவரே பாத பூஜை செய்கிறாரே ஏன்?போர் அபாயம் வரும்போதெல்லாம் அவர் உயிரை காப்பது அவர் கால்கள் தானே.
வீடு கட்ட லோன் கேட்கிறீர்களே எப்படி கட்டுவீங்க?கொத்தனார் வெச்சுதான்
ஏண்டா நான் கிளாசுக்குள்ள நுழைஞ்சா மட்டும் கண்ணாடி போட்ற? தலைவலி வர்றப்ப மட்டும் டாக்டர் கண்ணாடி போட சொன்னார் சார்

எதிர்த்த வீட்டுக்காரனுக்கு உடம்பு சரி இல்லனு பாக்க போனேன். என்னப்பா காய்ச்சல் 102 டிகிரி இருக்கு, ஹாஸ்பிடல் போகலாயனு கேட்ட,
நெருப்புடா, நெருங்குடா பாப்போம்னு சொல்றான்.

- Advertisement -

கல்யாண வீட்டுக்காரங்க எதுக்கு எல்லா மாட்டையும் வித்துட்டாங்க?
ஏன்னா, திருமணம் அப்படிங்கறது ஆயிரம் காலத்து பயிர், அத மாடு மேஞ்சிட கூடதுல அதுக்காகத்தான் வித்துட்டாங்க.

மொக்க ஜோக்ஸ் தமிழில்

மொக்க ஜோக்ஸ்விடை
நான் கணக்குல புலிஅப்ப ஏன் ஜீரோ வாங்கி இருக்க?
புலி இப்போ பதுங்கி இருக்கு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களை கொசு கடிப்பதில்லை ஏன் தெரியுமா?ஏன்னா அந்த அணியில மார்ட்டீன் இருக்காரே
இரண்டு கழுதை சேர்ந்து கணக்குப் போட்டா எப்படி இருக்கும்?எங்கேயாவது உதைக்கும்
என் பையன் செஞ்ச காரியத்தால என்னால வெளியில தலை காட்ட முடியல. ஏன்?
என் விக்க எடுத்து அவன் போட்டுக்கிட்டு போயிட்டான்
சார் பேப்பர்ல முட்டை போடாதீங்க.ஏண்டா?
நான் சைவம் சார்
எங்க டீச்சர் ஒருவகையில் எனக்கு அம்மா மாதிரிஅவ்ளோ அன்பா இருப்பாங்களா?
இல்ல, நல்லா தூங்க வைப்பாங்க
நேத்து கூட்டத்திற்கு வந்தவங்க எல்லாம் அஜித் படம் பாக்காதவங்கனு நினைக்கிறேன். எப்படி சொல்ற?
வரலாறு காணாத கூட்டம்னு சொன்னாங்களே
சார், என் தலையில் எறும்பு ஏறுது பாருங்கள். அதை ஏண்டா என்ன பார்க்க சொல்ற?
நீங்க தான சார் என் தலையில எதுவுமே ஏறாதுன்னு சொன்னீங்க அதான்
இன்னைக்கு இடியுடன் கூடிய மழை வரும்னு சொன்னாங்களே கேட்டீங்களா?நான் கேட்கல அவங்க தான் சொன்னாங்க
ஒரு ஓவருக்கு 6 பால்னா 5 ஓவருக்கு எத்தனை பால் போடுவாங்கஐந்து ஓவருக்கும் ஒரே பால தான் போடுவாங்க சார்
என் பையன் ஒழுங்கா படிக்கறதில்லன்னு இருந்த டிவிய வித்துட்டன். வெரிகுட், பையன எங்க காணோம் ?பக்கத்து வீட்டுக்கு டிவி பாக்க போய் இருக்கான்.
தளபதி, போரில் நாம் தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன வழி?போரையே சந்திக்காமல் இருப்பது தான் ஒரே வழி மன்னா
செல்போன் அடிச்சாலே மன்னர் மயக்கமாகி விழுந்து விடுகிறாரே ஏன்?யாரோ போர்முரசு ஒளியை ரிங் டோனாக வைத்துக் கொடுத்து உள்ளார்களாம்
ஏண்டா பரீட்சை பேப்பரில தண்ணிய ஊத்தி எழுதுற?நீங்கதானே சார், விடைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து எழுதனும்னு சொன்னிங்க
ஜலதோஷம்னு சொல்லிட்டு சுடுகாட்டுல என்ன பண்ற?ஆவி பிடிக்கறன்
பாத்திரக்கடைல எப்படி வேலைக்கு சேர்ந்த?உங்க நம்பிக்கைக்கு பாத்திரமா இருப்பேன்னு சொல்லித்தான்
வார்த்தைய அளந்து பேசுனு ஒருத்தர் சொல்லிட்டுப் போறாரே அவர் யார்?அவர் தான் சர்வேயர்
இந்த வழியா போகலாமா சார்? ஏன் தம்பி கேட்குற?
வாகனங்கள் போகக்கூடாது என்று போர்டு போட்டு இருக்கு. என்பேரு மயில்வாகனம் அதான் கேட்டேன்
எதுக்குடா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்க? நாளைக்கு ஸ்கூல்ல நீளம் தாண்டுற போட்டி இருக்கு, அதான்.
ஒவ்வொரு கம்பெனிக்கு வேலைக்குப் போகும் போதும் கையில் எதுக்கு ஏணி எடுத்துக்கிட்டு போற?கம்பெனியில ஏறி இறங்கினா தான் வேலை கிடைக்கும்னு நீங்கதான சொன்னீங்க

Mokka jokes in Tamil with answers

Mokka Jokes in Tamil with answers

Mokka Jokesanswers
அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ள போற மாதிரி கனவு வருது என்ன செய்யலாம்?படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்கோ
நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே கிடையாது, ஏன்?ஏன்னா அதுக்கு கால் கிடையாது
இத பாரு தம்பி கவலைப்படாதே, நானும் ஒரு காலத்தில் உன்ன மாதிரி சர்வரா இருந்தவன் தான்.நானும் ஒரு காலத்துல முதலாளியா இருந்த வந்தான்
சாக்லெட் சாப்பிடாதே! பல்லில் சொத்தை வரும். கீழ போடு!அத கீழ போட்டால் எறும்பு வருமே!
புலவரே! இப்போதெல்லாம் நீர் ஏன் மன்னரைப் புகழ்ந்து பாடுவதில்லை?பொய் சொல்லி பிழைக்க எனக்கு பிடிக்கவில்லை அமைச்சரே!
தமிழ் இலக்கியத்திற்கும், ஆங்கில இலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு?"மொழி" தான் சார்
ஏண்டா லேட்டு?நான் வரதுக்குள்ள பெல் அடிச்சுட்டாங்க, சார்!
மன்னரை பாடிய புலவர் சோகமாய் திரும்பி வருகிறாரே ஏன்?மன்னர் 6 மாதம் பின் தேதியிட்ட காசோலையை கொடுத்துள்ளாராம்.
நீ பாட்டுக்கு போறியே! சிக்னல கவனிக்கலையா?சிக்னலை கவனிச்சேன்! ஆனா உங்கள தான் "கவனிக்கல", சார்.
மன்னர் சரியான கிரிக்கெட் பைத்தியம் ஆகிவிட்டாரே!எப்படி சொல்ற?
போரில் ஏன் தோல்வி? என்றால் "களம்" சரியில்லை என்கிறார்.
டேய் ராமு விண்ணப்பத்தில உன் பேர எழுதச் சொன்னா ஏண்டா டில்லினு எழுதி இருக்க? நீங்க தானே சார் ரைட் இன் கேப்பிட்டல்னு சொன்னீங்க
ஏன்பா இந்த பக்கம் 12E வருமா?இங்க மருந்து அடிச்சு இருக்காங்க. அதனால ஒரு ஈ கூட வராது
அவரை குழந்தைகள் டாக்டர்னு நீ சொன்னது கரெக்ட் தான். எப்படி சொல்ற?
பிரிஸ்கிரிப்ஷன்ல எப்படி கிறுக்கி இருக்காரு பாரு
வீட்டுக்கு பேப்பர் போடும் பையன ஓட்டல்ல வேலைக்கு வச்சது தப்பா போச்சி. ஏன், என்ன ஆச்சி முதலாளி?
அங்க பாரு பேப்பர் ரோஸ்ட் எல்லாம் கஸ்டமர் மேல வீசி எரியறான்.
ராமு உன் பக்கத்துல தூங்கி கொண்டிருப்பவனை எழுப்பு. முடியாது சார், தூங்க வைக்கிறது நீங்க எழுப்பறது மட்டும் நானா.
மன்னர் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்கிறாரே எதுக்கு? புறமுதுகிட்டு ஓடி வரும்போது ஓட முடியலையாம்
உங்க தாத்தா பர்த்டேக்கு என்ன பிரசன்ட் பண்ணின? பொக்கை தான்
இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகம் எவ்வளவு? பத்து ரூபா.
2 புத்தகம் வேணும் கொஞ்சம் சொல்லி கொடுங்க.
நாங்க புத்தகம் விக்கறதோட சரி பள்ளிக்கூடத்துல தான் சொல்லிக் கொடுப்பாங்க
எப்படியோ நாலு வருஷம் படிப்பை முடிச்சிட்டிட்ட, அடுத்து என்ன பண்ணப் போற? அரியர்னு ஒரு மேல்படிப்பு இருக்குபா அதை படிக்கணும்.
நீ சாமி கிட்ட என்ன வேண்டிக்கிட்ட? நல்ல புத்தி வரட்டும்னு வேண்டிகிட்டேன்.
இல்லாததை தான கேட்டிருக்க எப்படியும் புத்தி வந்திடும்.
நான் கேட்டது உனக்குடா
- Advertisement -