MS Dhoni : தோனியின் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு. மைதானத்தில் தோனி ரசிகரின் செயலால் அதிர்ந்த வீரர்கள் – விவரம் உள்ளே

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.

Cup

பிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. நடந்து முடிந்த இந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தோனி ரசிகர் ஒருவரின் பேனர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேனரில் நீங்கள் சொர்க்கத்தில் விளையாடினால் நான் இறந்தும் கூட உங்களது விளையாட்டை பார்ப்பேன். என்று பேனர் வைத்தபடி மைதானத்தில் இருந்தார். இதோ புகைப்படம் :

Mahi

இதற்கு அடுத்து ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Kuldeep Yathav : சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே ஆஸ்திரேலிய வீரரை தூக்கிய குல்தீப் யாதவ் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -