முடி உதிர்வை பிரேக் போட்ட மாதிரி உடனடியாக தடுத்து நிறுத்த சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 2 பொருட்கள் போதும்.

hair3
- Advertisement -

சில பேருக்கு முடி உதிர்வு இந்த வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். தலையில் வியர்வை அதிகரிப்பதன் காரணமாகவும், பொல்யூஷன் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் வெயில் காலத்தில் சில பேரால் அவர்களுக்கு இருக்கக்கூடிய முடி உதிர்வை கட்டுப்படுத்தவே முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடிஉதிர்வை உடனடியாக கட்டுப்படுத்த ஒரு சூப்பரான ஹேர் பேக் உங்களுக்காக. மிக மிகக் குறைந்த செலவில் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து இந்த பேக்கை தயார் செய்து கொள்ளலாம்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு தேவை படப்போகும் பொருள். க்ரீன் டீ – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பின் மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் கிரீன் டீயையும் வெந்தயத்தையும் போட்டு, 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்து, அடுப்பை மீடியமாக வைத்து இந்த தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

கிரீன் டீ வெந்தயத்தில் உள்ள சத்து அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கட்டும். 10 நிமிடங்கள் வரை தண்ணீர் கொதிக்கட்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு செம்பருத்திப் பூ பொடி – 2 ஸ்பூன் போட்டு கலந்தால் லிக்விடாக ஒரு ஹேர் பேக் நமக்கு கிடைத்திருக்கும். இந்த ஹேர் பேக்குடன் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக அடித்து கலந்து விட்டு, அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டுக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய வீட்டின் அருகில் செம்பருத்தி பூக்கள் கிடைதால் அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இந்த பேக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் நன்றாக ஆயில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை தலையில் போட்டு 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிட்டு அதன் பின்பு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள், மூன்றே வாரம் இந்த பேக்கை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய தலைமுடி உதிர்வு உடனடியாக நிற்கும். மூன்று வாரத்திற்கு பின்பு இந்த பேக் போடுவதை நிறுத்தி விடுங்கள்.

இந்தப் பேக்கு பதிலாக வெந்தயம் கிரீன் டீ சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை அப்படியே ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து, அந்த தண்ணீரை தலைக்கு ஸ்கால்ப்பில் வாரத்தில் 3 நாட்கள் ஸ்ப்ரே செய்து வர உங்களுடைய முடி உதிர்வது நிரந்தரமாக நிற்க தொடங்கிவிடும். உங்களுக்கு இந்த ரெமடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. முடி உதிர்வு குறைந்து சில நாட்களில் உங்களுடைய முடி அடர்த்தியாக வளர தொடங்குவதை பார்க்கலாம்.

- Advertisement -