ஒரே ஒரு முறை முகத்தில் இதை மட்டும் போட்டு பாருங்க. இஸ்த்ரி போட்ட மாதிரி உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் அப்படியே நீங்கி விடும்.

face1
- Advertisement -

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி எப்போதும் பார்ப்பதற்கு இளமையாக அழகாக இருக்க வேண்டும் என்றால் இந்த பேக் போட்டா போதும். இந்த பேக்கை நம்முடைய வீட்டிலேயே முறையாக எப்படி தயார் செய்வது. நேரடியாக குறிப்பை பார்த்து விடலாம். முதலில் இந்த பேக் தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்த்துவிடுவோம். வெள்ளை கொண்டைக்கடலை – 1 ஸ்பூன், பச்சரிசி – 1 ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன், பாதாம் எண்ணெய் – 1 ஸ்பூன், இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.

முதலில் வெள்ளை கொண்டை கடலையையும் பச்சரிசியையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி ஒரு மூடி போட்டு 12 லிருந்து 15 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். இந்த பொருட்கள் ஊறவைத்த தண்ணீரில் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மொழுமொழுவென விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். தண்ணீராக உங்களுக்கு வெள்ளை நிறத்தில் கொஞ்சம் சாறு கிடைக்கும். அதை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடம் மிதமான தீயில் சூடு செய்தால் கொஞ்சம் கெட்டியாக ஜெல் போல நமக்கு கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு இந்த ஜெல்லை ஆறவைத்து தனியாக ஒரு பாட்டிலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு அலோ வேரா ஜெல், பாதாம் ஆயில் போட்டு நன்றாக கலந்தால், நம்முடைய வெள்ளை நிற ஃபேஸ் பேக் தயார்.

இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் வரை கெட்டுப் போகாது. இந்த கிரீமை எப்படி முகத்தில் அப்ளை செய்வது. முகத்தை முதலில் சுத்தமாக கழுவி விட வேண்டும். ஈரமில்லாமல் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த க்ரீமை தொட்டு ஆங்காங்கே சிறிய சிறிய புள்ளிகளாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முகம் முழுவதும் இந்த கிரீமை அப்படியே அப்ளை செய்து விட்டால், இந்த கிரீம் உங்களுடைய முகத்தில் போட்டதே தெரியாது. அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

கண்ணிற்கு கீழே இருக்கும் கருவளையம், கழுத்துப் பகுதிகளிலும் இதை நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அதன்பின்பு இரவு முழுவதும் இந்த கிரீம் உங்களுடைய முகத்திலேயே இருக்கலாம். மறுநாள் காலை எழுந்து எப்போதும்போல முகத்தை குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். முதல்முறை இந்த க்ரீமை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில் வித்தியாசம் தெரியும்.

இரவு முழுவதும் உங்களுடைய முகத்தில் இந்த கிரீமை வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் இரவு தூங்கச் செல்வதற்கு, 2 மணி நேரத்திற்கு முன்பு இந்த கிரீமை முகத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை வெறும் தண்ணீரில் மட்டும் கழுவிவிட்டு அப்படியே தூங்கச் செல்லுங்கள். ட்ரை பண்ணி பாருங்க. தொடர்ந்து இந்த கிரீமை முகத்தில் போட்டு வர உங்களுடைய முகசுருக்கம் சுத்தமாக நீங்கி விடும். முகம் கருமை நிறம் நீங்கி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

- Advertisement -