30 வயதிலும் 20 வயதான தோற்றம் பெற, முகச்சுருக்கம் நீங்க இந்த 3 பொருட்கள் போதுமே. 10 நிமிடம் இதை தடவினால் பளிச்சென மாறிவிடுவீர்கள்.

muga-surukkam
- Advertisement -

எல்லோருக்குமே தான் இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். நான் எப்படி இருந்தால் என்ன? என்று யாரும் நினைப்பதில்லை. தன்னுடைய முகம் அழகாக இருக்க பலரும் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்து கொண்டு தான் இருப்பார்கள். அப்படி செய்ய முடியாவிட்டாலும் குறைந்த அளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் சோப், க்ரீம் போன்ற விஷயங்களில் ஆவது கட்டாயம் கவனம் செலுத்துவார்கள்.

muga-surukkam

முகச்சுருக்கம் நீங்கி, முகம் பளிச்சிட, முகம் இளமையான தோற்றம் பெற முதலில் நம் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை இறுக்கமாக்க வேண்டும். முகத்தில் இருக்கும் தோல் இறுகும் பொழுது முகம் தானாகவே இளமையான தோற்றம் பெறும். எனவே முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவற்றை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கூடிய இந்த பொருட்கள் என்னவென்று? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புத்துணர்வு பெறச் செய்ய புதினா இலைகளின் சாறு மிகுந்த அளவில் துணை புரியும். எனவே புதினா இலைச் சாற்றினை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு இணையாக முகத்தில் இருக்கும் மாசு, மருக்களை அகற்றக் கூடிய அதீத சக்தி வாய்ந்த எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டின் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு முல்தானி மட்டி எனப்படும் ஒரு வகையான மண் கலவையை சேர்த்து பேஸ்ட் போல குழைத்து கொள்ள வேண்டும்.

multhani-mitti

பின்னர் இந்த கலவையை பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள் அதன் பிறகு உங்கள் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் அப்படியே நன்கு உலர விட்டு அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். இதனால் முகத்திற்கு நல்ல ஓய்வு கிடைக்கும். சருமம் ஆரோக்கியம் பெறும். முதலில் இதனை ஆரம்பிக்கும் பொழுது தினமும் தடவி கொண்டே வரலாம்.

- Advertisement -

ஒரு வாரம் சென்ற பின் வாரம் ஒரு முறை இப்படி செய்து கொள்வது சரும ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். தொடர்ந்து இப்படி செய்து வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் தளர்வடைந்து நாளடைவில் மீண்டும் இழந்த பொலிவை பெற துவங்கும். இவற்றுடன் சுத்தமான பன்னீர் மற்றும் தக்காளி சாறு விதை இன்றி சேர்த்து கலந்து கொண்டால் இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும்.

face-pack0

பன்னீர் முகத்தில் இருக்கும் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சி அடைய செய்யும். தக்காளி சாறு முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி உங்கள் இயற்கையான நிறத்தை மீட்டுக் கொடுக்கும். தொடர்ந்து ஒரு மாதம் இப்படி செய்து வர முகச் சுருக்கம் நீங்கி நீங்களும் இளமையான தோற்றம் பெறலாம். குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசை உடைய சருமம் மற்றும் கறுத்த சுருக்கம் உடைய சருமத்தை பராமரிக்க இந்த பொருட்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -