ஒரே நாளில் நீங்கள் பேரழகி போல் மாற வேண்டுமா? அதற்கு பார்லர் தான் போக வேண்டும் என்ற அவசியமில்லை. இதோ இந்த குறிப்பை பயன்படுத்தினாலும் போதும் ஒரே நாளில் பேரழகி ஆகிவிடலாம்

- Advertisement -

இன்றைய அவசர காலக்கட்டத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை உடனடியாக எதிர்பார்க்கும் மனநிலைக்கு நாம் ஆளாக்கி விட்டோம், எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதே கிடையாது. அது உடல் நோயை குணப்படுத்துவதாக இருந்தாலும் ச,ரி அல்லது மற்ற விஷயங்களாக இருந்தாலும் உடனடி தீர்வு இல்லாத எதற்கும் மதிப்பு இல்லை. அதனால் தான் அழகு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அழகு நிலையத்தை தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். இனி அது போல செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை இந்த பொருட்கள் உங்களிடம் இருந்தால் போதும் அழகு நிலையத்திற்கு சென்றால் கூட இந்த அளவிற்கு உடனடி தீர்வு கிடைக்காது அதே நேரத்தில் எந்த பக்க விளைவும் இல்லை.

இப்பொழுது நாம் இந்த பேக்கை தயார் செய்து விடுவோம். அதற்கு தேவையான பொருள், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு இதை கலக்க கொஞ்சம் தண்ணீர். முதலில் முல்தானி மெட்டி பவுடரை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்து வைத்துக் கொள்ளுங்கள் 10 நிமிடம் இது அப்படியே இருக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மீதம் இருக்கும் அரை டீஸ்பூன் பவுடரையும் அதில் சேர்த்து தேனையும் அதில் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள், கடைசியாக எலுமிச்சை சாறையும் கலந்து அதையும் நன்றாக குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை போடுவதற்கு முன் உங்கள் முகத்தை சுத்தமாக கழுவி முகம் நன்றாக காய்ந்த பிறகு இந்த பேக்கை போட்டு பத்து நிமிடம் கழித்து காய்ந்த உடன் நல்ல வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதை இரவு படுக்கும் முன் செய்தால் போதும் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. மாதம் இரு முறை செய்தால் போதும் உங்கள் முகம் அவ்வளவு பிரகாசமாகவும் பளிச்சென்று மாறிவிடும்.

இந்த பேக்கை தயார் செய்தவுடன் முகத்தில் போட்டு விட வேண்டும் பிரிட்ஜில் ஸ்டோர் செய்தெல்லாம் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இதில் சேர்த்துள்ள தேன், முல்தானி மெட்டி, எலுமிச்சை சாறு இவை அனைத்துமே முகத்தில் உள்ள தேவையில்லாத அழுக்கு, இறந்த செல்கள் என அனைத்தையும் நீக்குவதோடு, கருத்திட்டுகள் வெயிலினால் ஏற்பட்ட சரும பிரச்சனை, முகப்பரு வடு, என அனைத்தையும் சரி செய்து முகத்தில் நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி புதிய செல்களை உருவாகி நிறத்தையும் கூட்டி உங்களை நல்ல அழகுடன் மிளர செய்யும்.

அழகிற்காக இனி அதிக செலவு செய்யாமல் இது போல இயற்கை முறையை பயன்படுத்தி உங்கள் அழகை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -