30 வருடங்களாக முகத்தில் நிரந்தரமாக இருக்கும் முகப்பருவை கூட மூன்றே நாட்களில் மறைய செய்ய சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதுமே.

face1
- Advertisement -

இப்போது சொல்ல கூடிய இந்த குறிப்பு நூறு சதவீதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் கை மேல் பலனை கொடுக்கக்கூடிய குறிப்பு. முகப்பரு இருப்பவர்கள், முகப்பரு வந்து போன இடத்தில் தழும்பு இருப்பவர்கள் கட்டாயமாக இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். ஆயிரம் ஆயிரமாக காசு கொடுத்து வாங்கிய கிரீம் செய்யாத வேலையை கூட, இந்த ஒரு பொருள் செய்யும். அது என்ன பொருளாக இருக்கும். குறிப்பை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக உள்ளதா வாங்க பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் அரிசி தாங்க அந்த பொருள். பச்சரிசியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ரேஷன் பச்சரிசியாக இருந்தாலும் சரி, அதை எடுத்து இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பாத்திரத்தில் கழுவிய பச்சரிசியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

ஊற வைத்த அரிசியை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி மாவு கோலம் போட அரைப்போம் அல்லவா. அதைவிட கொஞ்சம் தண்ணீராக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அந்த மாவை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்தால், பச்சரிசி மாவில் இருந்து பால் மட்டும் நமக்கு கிடைத்துவிடும். திப்பி தனியாக நின்று விடும்.

வடிகட்டி வைத்திருக்கும் அந்தப் பாலை அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 2 மணி நேரம் ஆட்டாமல் ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். மேலே தண்ணீர் மட்டும் தெளிந்து வரும். தண்ணீரை மேலோடு தனியாக எடுத்து விடுங்கள். அடியில் திக்காக பச்சரிசி பால் இருக்கும் அல்லவா. அது மட்டும் தான் நமக்கு தேவை. இதை கையில் தொட்டால் திக்கான தேங்காய் பால் போல கையில் ஒட்டும். அதை எடுத்து முகப்பரு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். முகப்பரு வந்து போன இடத்தில் தழும்பு இருந்தால், அந்த இடத்திலும் இதை எடுத்து அப்படியே அப்ளை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு தூங்கும் போது தழும்பு உள்ள இடத்தில் இந்த பாலை வைத்துவிட்டு, அந்த பால் காய்ந்ததும் அப்படியே தூங்கச் செல்லலாம். (ஐந்து நிமிடத்தில் அது காய்ந்து விடும்.) மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம். பகலில் நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால், பகலிலும் இதை உங்களுடைய முகத்தில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிடலாம். தானாக அது காய்ந்து உதிர்ந்து விடும்.

மூன்று நாட்கள் இரவு இப்படி முகத்தில் இந்த அரிசி பாலை வைக்கும் போது முகப்பரு இருந்தாலும் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். முகப்பரு இருந்த இடத்தில் தெரியும் தழும்பு கட்டாயமாக மூன்று நாட்களில் பாதி அளவு குறைந்து விடும். தொடர்ந்து பத்து நாள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். முகப்பரு இருந்த இடத்தில் தடம் தெரியாமல் உங்களுடைய சருமம் மாறும்.

நிச்சயமா நீங்க நம்ப முடியாது ரிசல்ட்டை கண்ணாடியில் பார்க்கலாம். முயற்சி செய்து பார்த்து விட்டு பிறகு நீங்களே யோசிப்பீங்க. இவ்வளவு சூப்பர் ரெமிடியை இத்தனை நாள் பயன்படுத்தாமல் விட்டுட்டோமே என்று. இந்த பச்சரிசி பாலை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். ஒரு பிளாஸ்டிக் கண்டைனரில் மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முகம் முழுவதும் ஏதாவது பிரச்சனை இருக்கிறது கரும்புள்ளிகள் இருக்கிறது என்றாலும் இந்த பாலை பேக் போல முகம் முழுவதும் அப்ளை செய்து கூட 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவு பெறும். உங்களுடைய சருமத்தின் நிறம் படிப்படியாக வெள்ளையாக மாறத் தொடங்கும். குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்லதொரு பலனை பெறுவீர்கள்.

- Advertisement -