முக சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் உடனடியாக கிடைக்க நாம் சாப்பிடும் சாதம் 1 கைப்பிடி இருந்தால் போதுமே! முதுமைக்கு குட்பை சொல்லலாம் வாங்க!

muga-surukkam-rice
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தான் நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்துடன் இருக்கவே விரும்புகின்றனர். இளமையான தோற்றம் பெறுவதற்கு கட்டாயம் அதற்கான சிறிது நேரம் செள்விட வேண்டியிருக்கும். அதிகம் செலவு செய்யாமல் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீக்கி, நீண்ட காலம் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள உதவ 1 கைப்பிடி சாதம் இருந்தால் போதும். அதனுடன் என்னென்ன பொருட்களை நாம் சேர்க்க இருக்கிறோம்? அது என்ன மாதிரியான பலன்களை நமக்கு கொடுக்க இருக்கிறது? என்பது போன்ற அழகு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

சூடாக வடித்த சாதத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு தனியாக ஒரு கிண்ணத்தில் எப்பொழுதும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதம் நம் முகச் சுருக்கத்தைப் போக்கி, நம் முகத்தில் இருக்கும் துவாரங்களை இருக செய்கிறது. முகத்தில் சிறு சிறு குழிகள் போன்ற ஒரு அமைப்பு உண்டு. இதில் சேரும் அழுக்குகள் நம்முடைய முகத்தை ஆரோக்கியம் அற்றதாக மாற்றி விடுகிறது. முக துவாரங்களை பெரிதாக்கினால் இந்த பிரச்சனை மேலும் அதிகரித்து முகத்தில் பல்வேறு விதமான தொந்தரவுகள் உண்டாகிறது.

- Advertisement -

முகத்துவாரங்கள் சுருங்கி போகும் பொழுது நம் முகம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியம் உள்ளதாகவும் இருக்கிறது. மேலும் நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள், கிருமிகளை நீக்கும் ஆற்றல் தூய பாலுக்கு உண்டு. பாலில் இருக்கும் சத்துக்கள் சிறந்த கிளன்சர் போல நம் முகத்தை கிளன்சிங் செய்து பொலிவான தோற்றத்தை கொடுக்கிறது.

அது மட்டும் அல்லாமல் சுத்தமான மலை தேன் நம் இளமையான தோற்றத்துக்கு அதிக அளவு உறுதுணையாக இருக்கிறது. இந்த மூன்று பொருட்களையும் எந்த விகிதத்தில் நாம் அரைத்து, எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம். ஒரு கைப்பிடி அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்த சாதத்துடன், ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான மலை தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த தேன் வகையாக இருந்தாலும், அது கலப்படமற்றதாக இருந்தால் மிகவும் நல்லது. அதனுடன் 100ml அளவிற்கு காய்ச்சாத பால் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டியான க்ரீம் போல கிடைக்க வேண்டும். நீர்க்க இருந்து விடக் கூடாது. இதனால் உங்களுடைய சாதத்திற்கு ஏற்ப பால் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த கிரீம் போன்ற கலவையை முகம் முழுவதும் தடவி அரை மணி நேரம் அப்படியே உலர விட்டு விடுங்கள்.

சாதம் முகத்தோடு முகமாக நன்கு ஒட்டிக் கொண்டு இருக செய்யும். அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த ஜில்லென்ற தண்ணீரால் அலம்பி விட வேண்டும். இது போல தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து பாருங்கள். உடனடியாக நல்ல மாற்றம் தெரியும். முக துவாரங்களுக்குள் சென்று அதில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றி, துவாரங்களை இறுகச் செய்து நாளடைவில் இளமையான தோற்றத்தை நமக்கு தக்க வைத்துக் கொள்ள ரொம்பவே உதவியாக இருக்கும். 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய இந்த பொருட்களை கொண்டு நம்மை முதுமையில் இருந்து எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -