உங்ககிட்ட இந்த ஒரு ஆயில் இருந்தாலே போதும். நீங்க தான் எப்போதும் பியூட்டி குயின்.

face3
- Advertisement -

பொதுவாக முகத்திற்கு என எத்தனை குறிப்புகள் இருந்தாலும் அத்தனையும் எல்லோருக்கும் செட் ஆவதில்லை. காரணம் ஒவ்வொருவரின் முகத்தின் தன்மையும் வேறு வேறு மாதிரி தான் இருக்கும். அதில் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. இது வரைக்கும் நாம் எத்தனையோ அழகு குறிப்புகள் பார்த்து இருப்போம். இது நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய் வைத்து தான் இந்த ஆயில் செய்ய போகிறோம். காயை வைத்து முகத்தை இவ்வளவு அழகாக்க முடியும் என்றால் நம்ப முடியாது தான். அந்த காய் வேறு ஒன்றும் இல்லை கேரட் தான். இந்த கேரட் பயன்படுத்தி தான் முகத்துக்கான ஒரு பேஸ் ஆயில் தயார் செய்ய போகிறோம். சரி வாங்க நேரடியாக பதிவுக்குள் சென்று பாக்கலாம்.

இந்த ஆயிலை தயாரிக்க நமக்கு இரண்டே பொருள் மட்டும் தான் தேவை. ரெண்டு நீளமான கேரட், கால் லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய். அவ்வளவு தாங்க இது இருந்தால் போதும்.

- Advertisement -

அதற்கு முதலில் கேரட்யை நன்றாக துருவி நிழலில் (வெயிலில் கட்டாயமாக காய வைக்க கூடாது) உலர்த்தி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கேரட் நன்றாக காய வேண்டும். பிறகு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக (பவுடர் போல) அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கால் லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் அரைத்து வைத்த பவுடர் சேர்த்து சூடு படுத்த வேண்டும்.

இதில் சூடு படுத்தும் முறை தான் மிகவும் முக்கியமானது. அதற்கு முதலில் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதற்கு உள்ளே இந்த எண்ணெய் கிண்ணத்தை வைத்து சூடு படுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் எடுத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து வடிகட்டி ஒரு பாட்டில் ஊற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஆயில் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரட் ஈரம் இல்லாமல் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். அதே போல் பச்சையாகவும் அரைத்து வைக்க கூடாது. இதை மட்டும் சற்று கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்களை கருவாச்சி என்று கூப்பிட்ட வாயெல்லாம் வெறும் 7 நாட்களில் சிகப்பி என்று கூப்பிடும். செக்கச்செவேலென சிகப்பழகை தரும் சிவப்பு பருப்பு.

இந்த ஆயில் தினமும் உங்கள் முகத்தில் தேய்த்து இருபது நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு எப்போதும் போல முகத்தை கழுவி விடுங்கள். இரவில் தூங்க செல்லும் முன்பு கூட இதை தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிய பின் தூங்க செல்லலாம். குறைந்தது ஒரு மாதம் வரை தொடர்ந்து போட்டு வந்தால் தான் உங்களின் முகத்தின் அழகிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

- Advertisement -