24 மணி நேரமும் உங்களுடைய முகம் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷா இருக்கும். ஒரு நாள் நைட் இந்த பேக்கை போட்டு பாருங்க.

face9
- Advertisement -

நிரந்தரமான அழகு என்பது எப்படி இருக்க வேண்டும். 24 மணிநேரமும் நம் கூடவே இருக்க வேண்டும். இரவு தூங்கி காலையில் எழுந்திருக்கும் போதும் நம்முடைய முகத்தைப் பார்த்தால் அந்த நிலா போல பிரகாசமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது. இயற்கையான முறையில் நம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைப் போக்கி, பிரகாசமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் ஒரே வழி.

நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து முகத்தை 24 மணி நேரமும் அழகாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பை நீங்க தெரிஞ்சுட்டு, இதை ட்ரை பண்ணி பாருங்க. நீங்களும் தூங்கி எழுந்திருக்கும்போது அழகாத்தான் இருப்பீங்க.

- Advertisement -

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருள் என்னென்ன தெரியுமா. வெந்தயம், பச்சை பயிறு. இந்த இரண்டுமே சரும அழகை பொலிவு பெறச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இந்த 2 பொருட்களிலிருந்தும், 2 ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் போட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி முதலில் 8 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை வடித்து, ஊற வைத்த இந்த பொருட்களை ஒரு வெள்ளை துணியில் கட்டி வைத்தால் 24 மணி நேரம் கழித்து முளைவிடத் தொடங்கும்.

முளைகட்டிய வெந்தயம், முளைகட்டிய பச்சைப் பயிறு, இந்த இரண்டு பொருட்கள் இப்போது நமக்கு கிடைத்து விட்டது. இதை அப்படியே மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி விழுது போல் கொஞ்சம் திக்காக அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்டீல் வடிகட்டியை கொண்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய எசன்ஸ் நமக்கு திக்காக கிடைத்திருக்கும் அல்லவா. அதில் 2 டேபிள் ஸ்பூன் அலோ வேரா ஜெல் சேர்த்து அடித்து கலக்கினால் ஜெல்லி போல ஒரு கிரீம் நமக்கு கிடைத்திருக்கும். இதை ஒரு பாட்டிலில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். 10 நாட்கள் கெட்டுப் போகாது. இதை தினந்தோறும் இரவு தூங்கச் செல்லும் போது முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

எப்படி தெரியுமா. முகத்தை சுத்தமாக கழுவி விடுகிறீர்கள். அதன் பின்பு முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீமை தொட்டு லேசாக உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே சிறிய புள்ளிகளாக வைத்து, அப்படியே தடவி 2 நிமிடம் மசாஜ் செய்தால் க்ரீம் அனைத்தையும் முகம் உள்ளே உறிஞ்சிக்கொள்ளும். அப்படியே தூங்கச் சென்றுவிடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த கிரீமை பயன்படுத்தலாம். 30 நாட்கள் பயன்படுத்திய பின்பு முகத்தில் வரும் மாற்றத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த முளைக்கட்டிய வெந்தயம் பச்சை பயிரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டிய போகுது திப்பி கிடைத்திருக்கும் அல்லவா. அதை தூக்கி குப்பையில் போட்டு விடாதீர்கள். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் நன்றாக இருக்கும். பகலில் இந்த பேக்கை முகத்தில் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த இரண்டு பொருட்களை மேல் சொன்ன முறைப்படி பயன்படுத்தி பாருங்களேன். உங்களுடைய முகத்தில் வரும் பிரகாசத்தை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

- Advertisement -