முன் கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரை. கோபத்தை குறைக்க இதை விட சுலபமான ஒரு வழியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது.

kobam
- Advertisement -

எல்லா மனிதனுக்கும் இயற்கையாக வரக்கூடிய ஒரு உணர்வு தான் கோபம். கோபதாபங்கள் இல்லாத மனிதர்களே நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால் நமக்கு ஏற்படக்கூடிய எந்த உணர்வுகளாக இருந்தாலும் அதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த வரிசையில் கட்டுப்பாடில்லாத கோபம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அழித்து விடும். சில பேருக்கு கோபம் வந்துவிட்டால் அவர்களை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாது. அவர்களை அறியாமலேயே கத்தி கோபத்தை தீர்த்துக் கொள்வார்கள்.

முன்கோபத்தால் வேலையை இழந்தவர்கள் நிறைய பேர், எதிர்காலத்தை இழந்தவர்கள் நிறைய பேர், முன்கோபத்தால் சில பேர் தங்களுடைய வாழ்க்கையையே இழந்துள்ளார்கள். இழப்பு ஏற்பட்ட பின்பு சிந்தித்து இருப்பார்கள்! ‘அன்று நாம் கோபப்பட்டு இருக்கக்கூடாது என்று’! ஆனால் எல்லா விஷயங்களையும் இழுந்த பின்பு சிந்திப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம். இப்படி முன்கோபம் ஆனது உங்களுடைய வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதா? முன் கோபத்தை குறைக்க ஒரு சுலபமான முத்திரை பயிற்சியைத் தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வாழ்க்கையில் வரக்கூடிய நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய சக்தி இந்த முத்திரை பயிற்சிக்கு உண்டு. அந்த வரிசையில் கோபத்தை கட்டுப் படுத்தக்கூடிய, கோபத்தை சீராக்கக் கூடிய முஷ்டி முத்திரையை பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். தினமும் காலையில் எழுந்து முகம் கை கால் அலம்பி விட்டும் இந்த முத்திரைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு முகம் அலம்பி விட்டு முடிந்தால் தரையில் பாய் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முடியாதவர்கள் நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். வெறும் தரையில் மட்டும் அமரக்கூடாது.

முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் உங்களது தொடை மேலே வைத்துக் கொள்ளுங்கள். கைகள் வானத்தைப் பார்த்தவாறு இருக்கட்டும். இரண்டு உள்ளங்கைகளையும் மூடிக்கொண்டு கட்டை விரலால் நடு விரலை அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு இந்த முத்திரையை எப்படி செய்ய வேண்டும் என்பது தெளிவாக புரியும்.

- Advertisement -

கிழக்கு பார்த்தவாறு முதுகுத்தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்துகொண்டு இந்த முத்திரையை 2 கையிலும் பிடித்துக் கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து விட்டு மனதை அமைதிப் படுத்தி மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடவேண்டும். எதையுமே நினைக்காமல் முத்திரையை பிடித்து தியானம் செய்வது மிக மிக நல்லது. உங்கள் மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை என்றால் ‘ஓம்’ எனும் மந்திரத்தை சொல்லாம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு விருப்பமான கடவுளின் பெயரையும் உச்சரித்து கொள்ளலாம்.

தொடர்ந்து இப்படி ஒரு மாதத்திலிருந்து, நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த முத்திரையை பயிற்சியை செய்து வந்தால் உங்களுக்கே ஒரு வித்தியாசம் தெரியும். உங்களுடைய மனது கோபத்தை கட்டுப்படுத்தும். இந்த முத்திரையை செய்தால் கோபம் வராமல் இருந்துவிடும் என்று சொல்ல வரவில்லை. கோபம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

எந்த நேரத்தில் எப்போது கோபம் வர வேண்டுமோ, அந்த இடத்தில் கோபத்தை காண்பிக்க வேண்டும். கோபமே இல்லாத ஒரு மனிதராக இருந்தாலும் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதற்காக கோபம் மட்டுமே வாழ்க்கையாகவும் இருக்கக்கூடாது. எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

குறிப்பாக, காமம் குரோதம் விரோதம் இந்த மூன்று விஷயங்களும் மனிதனிடத்தில் எப்போதுமே அளவோடுதான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி இந்த உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இந்த மூன்று விஷயங்களை கட்டுப்படுத்தி வாழக்கூடிய மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஜெயித்து விடுவான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -