எதிரி தொல்லை நீங்க வேல் வழிபாடு

murugan dheepam
- Advertisement -

வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் அதற்கான மனதைரியமும், நம்பிக்கையும் வேண்டும். அது இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யவே முடியாது. சிலர் எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள். எதற்காக இந்த பயம் ஏன் வருகிறது என்று அவர்களுக்கே தெரியாது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் மனதில் ஏற்படும் பயத்தால் அவர்களே அதை செய்யாமல் தவிர்த்து விடுவார்கள்.

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம்வாழ்க்கையில் எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று இரவும் பகலும் அயராது உழைத்து பாடுபடுவோம். இதைப் பிடிக்காமல் தடுக்க நம்முடனே சிலர் எப்போதுமே இருப்பார்கள். நம் முன்னேற்றத்திற்கு உதவி செய்வது போல நம்முடன் பழகிக் கொண்டே பின்னால் குழி பறித்து கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் நேரடியாகவே தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு செயலை தொடங்க பயந்து கொண்டே செய்யாமல் இருந்தாலும், துணிந்து செய்யும் போது அதை செய்ய விடாமல் தடுப்பவர்கள் தாண்டி நம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அத்தகைய முன்னேற்றத்திற்கு வழிபடக் கூடிய அற்புதமான கடவுள் எனில் அவர் முருகப்பெருமான். ஆம் முருகப்பெருமானை நினைத்து நாம் வழிபடும் போது நமக்குள் புது தைரியமும் எதிரி தொல்லை இல்லாமலும் வாழலாம்.

எதிரி தொல்லை மன பயம் நீங்கி வாழ வழிபாடு

வேலுண்டு வினையில்லை என்பது வெறும் வாசகம் மட்டும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த வேல் நடத்தி இருக்கும் அதிசயம். அப்படியான வேலை வைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யப் போகிறோம். அப்படியானால் இது வேல் வழிபாடு தானே பலரும் நினைக்கலாம். இந்த வழிபாட்டிற்கு அஸ்திர பூஜை என்று பெயர். அதை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம் பார்க்கலாம்.

- Advertisement -

இந்த அஸ்திர பூஜை வழிபாடு செய்வதற்கு முன்பாக நீங்கள் இந்த இரண்டில் எந்த காரணத்திற்காக வழிபாடு செய்கிறீர்களோ அல்லது இதைத் தவிர்த்து வேறு முக்கியமான காரணமாக இருந்தாலும் அதற்காகவும் வேண்டிக் கொள்ளலாம். அதை மனதார நினைத்து இதற்காக இந்த அஸ்திர பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அதே போல் இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்குங்கள். முருகருக்கு உகந்த நாள் அது தான்.

செவ்வாய்க்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹோரையில் இந்த பூஜை தொடங்குங்கள். அதற்கு ஒரு கலசத்தை எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் வேல் வாங்கி அதையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கலசத்தில் பச்சரிசியை முழுவதுமாக நிரம்பிய பிறகு வேலை அதில் சொருகி அதன் மேல் எலுமிச்சை பழத்தை சொருகி பூஜை அறையில் வையுங்கள். இப்படி வைக்கும் பொழுது ஒரு தாம்பாள தட்டு வைத்து அதன் மேல் கலசத்தை வையுங்கள்.

- Advertisement -

48 நாள் பூஜை முடிந்தவுடன் ஆலயத்தில் கொடுத்து விட வேண்டும். ஆகையால் நீங்கள் எந்த வேலை வாங்க வேண்டும் என்று உங்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளுங்கள். இப்படி சொருகி வைத்த வேலுக்கு முன் அகல் தீபம் ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். உங்களால் முடிந்த ஏதேனும் எளிமையான நெய்வேத்தியத்தை படைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழம் நிறம் மாறினால் வேறு பழத்தை மாற்றிக் கொள்ளலாம் தவறில்லை.

48 நாட்கள் அசைவத்தை தவிர்த்து அஸ்திர பூஜையை செய்த பிறகு நீங்கள் வழிபட்டு வேலை கொண்டு முருகன் ஆலயத்தில் உண்டியலில் போட வேண்டும். அது பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக இருந்தால் இன்னும் சிறப்பு. திருத்தணி திருச்செந்தூர் இப்படி உங்களால் எந்த ஆலயத்திற்கு செல்ல முடியுமோ அங்கு சென்று வேலை காணிக்கையாக செலுத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் நீங்க செய்ய வேண்டிய தானம்.

இந்த அஸ்திர பூஜையை 48 நாட்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே எதற்காக இந்த பூஜையை தொடங்கினீர்களோ அதற்கான பலன் கிடைத்திருக்கும். வெற்றியை தரக் கூடிய இந்த வெற்றி வேலை வைத்து அஸ்திர பூஜையை செய்பவர்கள் வாழ்க்கையில் எந்தத் தோல்வியும் பயமும் இன்றி முன்னேறலாம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருக்குமேயானால் நம்பிக்கையுடன் செய்து வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்.

- Advertisement -