10 ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு வழி இல்லை என்பவர்கள், இந்த ஒரு விளக்கை ஏற்றினால் 10 லட்சத்தை பட்டுன்னு சம்பாதித்து விடலாம்.

murugan
- Advertisement -

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சம்பாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சி உங்களிடம் இருக்க வேண்டும். சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் கைநீட்டி பணத்திற்காக பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணம் உங்களுடைய ஆழ்மனதில் விதைக்கப்பட்டு, பின்பு இந்த பரிகாரத்தை செய்தால், நிச்சயமாக பத்து ரூபாய் கூட சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கும் உங்களுக்கு, பத்து லட்சம் சம்பாதிக்க கூடிய பல வாய்ப்புகள் தேடி வரும். பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து, பல லட்சம் வரை பல கோடிகள் வரை குவிக்க நம்பிக்கையுடன் சேர்ந்த இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இந்த பரிகாரத்தை நாம் முருகப் பெருமானை நினைத்து செய்யப் போகின்றோம். பெரும்பாலும் நம்முடைய வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவப்படம் கட்டாயம் இருக்கும். செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை பரவலாக கொட்டிக் கொள்ள வேண்டும். பரவி இருக்கும் பச்சரிசியில் உங்கள் விரல்களைக் கொண்டு ஸ்டார் வரைந்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர கோலம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா. சுலபமாக வரைந்து விடலாம்.

- Advertisement -

இந்த நட்சத்திரக் கோளத்தில் 6 முக்கோணம் இருக்கும் அல்லவா. அந்த 6 முக்கோணத்திலும் 6 வசம்பை வைத்து விடுங்கள். வசிய தன்மை கொண்ட வசம்பு. ஸ்டார்க்கு நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு உள்ளே ஒரு, 1 ரூபாய் நாணயத்தையும் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது எரிந்து கொண்டிருக்கும் இந்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து முருகப்பெருமானினை மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு இருக்கும் வறுமை அனைத்தும் நீங்க வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் தூரப் போக வேண்டும். வருமானம் வரவேண்டும். வருமானத்திற்கு தேவையான வழிகளை காட்ட வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நிவேதனத்தை பூஜையில் வைக்கலாம். பால் பழம் இப்படி எந்த நெய்வேதியமாக இருந்தாலும் சரி.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை முழுவதும் நீங்கள் தயார் செய்த பச்சரிசி தட்டு அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். விளக்கில் எண்ணெய் தீர்ந்த பிறகு விளக்கை குளிர வைத்து விடுங்கள். அடுத்த நாள் அதாவது புதன்கிழமை, பூஜையில் வைத்த வசம்பை எடுத்து ஒரு பச்சை துணியில் கட்டி பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசியை எடுத்து சர்க்கரை பொங்கல் பிரசாதமாக செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து விடுங்கள்.

ஒரு ரூபாயை முருகன் கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். இந்த ஒரு சின்ன பரிகாரம் தான். ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்கள் வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்கள் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -