வீட்டில் ஆங்காங்கே இந்த 1 பொருளை வைத்தாலே போதும். பணம் வீண் விரயம் ஆவது குறையத் தொடங்கும். பண சேமிப்பும் அதிகரிக்கும்.

cash
- Advertisement -

நமக்கு வருமானமாக வரக்கூடிய பணம், வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கினாலே போதும், வறுமை என்பது இருக்காது. வரக்கூடிய வருமானத்தை வீண் செலவு இல்லாமல் எப்படி சேமிப்பது என்று தெரியாமல் தான், பலபேர் இன்று திணறி வருகின்றோம். வீண்செலவு என்பது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிக்கக் கூடிய விஷயம் அல்ல. நம் வீடு முழுவதும் நம்மை சுற்றியும் வீண்செலவுக்காண விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

உதாரணத்திற்கு வீட்டில் சமையல் அறையில் ஏதேனும் பழுதடைந்து விட்டால், அதை மாற்றியே ஆகவேண்டும். சமையலறையில் ஒரு வீண்செலவு உண்டாகிறது. வரவேற்பரையில் உள்ள ஃபேனோ, டீவியோ சோபா திடீரென்று பழுதடைந்து விட்டால், அதை மாற்றியே ஆகவேண்டும். இதேபோல் வீட்டின் மற்ற இடங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் சரி, அது பழுதடைந்து விட்டால், அதை உடனடியாக மாற்றியே ஆக வேண்டும். இதை ஒட்டுமொத்தமாக வீண் விரயங்கள் என்று சொல்லிவிட முடியாது.

- Advertisement -

இருப்பினும் நன்றாக இருக்கக்கூடிய பொருள் திடீரென்று பழுதடைந்து என்றால், அதற்கு காரணம் அதில் செயல்படுகின்ற எதிர்மறை ஆற்றல்களும் எதிர்வினைகளும் தான். இவைகள் திடீர் திடீரென்று வரக்கூடிய வீண் விரயங்கள் தான். இவை அனைத்தையும் தடுக்க நம் வீட்டில் ஆங்காங்கே இந்த ஒரு பொருளை வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதடைந்து திடீரென்று சேதாரம் ஆகி, வீட்டில் எந்த ஒரு வீண்விரயமும் ஆகாமல் இருக்கும். அது என்ன பொருள். ‘முருங்கை விதை’.

murungai-vidhai

நன்றாக முற்றிய முருங்கை காய்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய பருப்பு தான், நன்றாக காய்ந்த பின்பு முருங்கை விதைகளாக மாறுகின்றது. முருங்கைமரம் இருப்பவர்கள் முருங்கை மரத்திலிருந்து முற்றிய காய்களை எடுத்து அதனுள்ளே இருக்கும் காய்களை வெயிலில் உலர வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். முருங்கைமரம் இல்லாதவர்கள் கடைக்குச் சென்று முற்றிய முருங்கை காய்களை வாங்கி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 11, 21 எந்த கணக்கில் எடுத்துக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம் தான்.

- Advertisement -

இந்த முருங்கை விதைகளை கண்ணுக்குத் தெரியாமல் உங்களுடைய வீட்டில் ஆங்காங்கே ஒவ்வொரு இடத்தில் ஒன்றை போட்டு வைத்தாலே போதும். (வீட்டில் இருக்கும் எல்லா அலமாரிகளில் பொட்டு வைத்தால் கூட போதும்.) எதிர்மறை ஆற்றலினால் வீட்டில் வரக்கூடிய வீண் செலவுகள் குறைக்கப்படும். சில பேர் வீடுகளில் அடிக்கடி வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதாகி வீண் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இதை உடனடியாக முயற்சி செய்து பாருங்கள். ஆனால் 60 நாட்களுக்கு ஒரு முறை இந்த விதையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பரிகாரத்திற்கு பவர் இருக்கும்.

murungai-vidhai1

இந்த விதையை பணப்பெட்டியில் வைக்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வரும். தாராளமாக ஒரு பேப்பரில் மடித்து, ஒரு விதையை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். அந்த பணம் சுப செலவுகளுக்கு மட்டுமே செலவாகும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -