குடைக்குள் இருந்தும்
முழுவதுமாக நனைகிறேன்
அவள் இதழ்கள் பொழியும்
முத்த மழையில்..
இதையும் படிக்கலாமே:
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை பொழியும் காதலர்கள், சில நாட்கள் கடந்த பிறகு முத்தங்களால் அன்பை பொழிவர். தன் காதலனிடமோ அல்லது காதலியிடமோ வாங்கிய முதல் முத்தம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாய் இருக்கும்.
முத்தம் என்பது காதலின் ஒருவகையான வளர்ச்சியை தான் குறிக்கிறது. எந்த ஒரு பெண்ணும் காதலித்த முதல் நாளே தன் காதலனுக்கு முத்தம் கொடுப்பதில்லை. சில காலத்திற்கு பிறகு தன் காதலன் அவளுக்கு முத்தம் கொடுக்க நினைத்தாலும் அவள் அதை அனுமதிப்பதில்லை. எப்பொழுது ஒரு பெண்ணிற்கு தன் காதலன் மீது முழு நம்பிக்கை வருகிறதோ அப்போது தான் அவள் இதழ்களில் இருந்து முதல் முத்தம் தோன்றும். அதுவரை ஒரு காதலன் காத்திருப்பது தான் அவனுக்கு அழகு.
நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், தோழன் தோழி கவிதை, பிரிவு சம்மந்தமான கவிதை என பல கவிதைகள் இங்கு உண்டு.