உங்கள் பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகிச் செல்லும்

marikolundhu
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. படிப்பு இல்லாதவன் கல்வி வேண்டும் என்றும், பணம் இல்லாதவன் பணம் வேண்டும் என்றும், தொழில் இல்லாதவன் தொழில் வேண்டும் என்றும், வேலை இல்லாதவன் வேலை வேண்டும் என்றும் இப்படி எதிர்பார்ப்புகள் என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். இப்படி அனைவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறி விட்டால் இந்த உலகத்தில் பிரச்சனை என்பதே இருக்காது. ஆனால் இவற்றை நிறைவேற்றிக் கொள்ள அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் இல்லையே, அதிர்ஷ்டம் என்பது நாம் நினைக்கும் முன்பே அந்த விஷயம் நம் கையில் வந்து நிற்கும். இவ்வாறு அதிர்ஷ்டசாலிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இப்படி நாமும் அதிஷ்டசாலியாக மாற நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது தான். வாருங்கள் அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் பூஜை அறையில் இஷ்ட தெய்வம், குல தெய்வத்திற்கு பூஜை செய்வது வழக்கம் தான். அப்படி பூஜை செய்யும்பொழுது வாசனை மலர்களை வைத்து தான் ஒவ்வொருவரும் இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றோம். இப்படி மல்லி, ரோஜா என சில வாசனை மலர்களை மட்டும் தான் பூஜைக்காக பயன்படுத்துகிறோம்.

- Advertisement -

இவ்வாறு மலர்கள் அனைத்தும் இந்த பூமியில் மலர்வது இறைவனுக்காக தான். அப்படி இறைவனின் அருள் பெற்ற வாசனை மலர் ஒன்று இருக்கிறது. ஆனால் இது மற்ற மலர்களைப் போல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதில்லை. ஆனால் இதன் வாசனை மட்டும் மற்ற மலர்களை விட நிலைத்து நிற்கிறது. பொதுவாகவே மலர்கள் புதியதாக பூத்திருக்கும் பொழுது வாசனை அதிகமாக இருக்கும். அவை ஒரு நாள் மட்டும் வாசனையாக இருந்து மறுநாள் வாடி விடும்.

ஆனால் இந்த மலர் பல நாட்கள் ஆனாலும், மாதங்கள் ஆனாலும், வருடங்கள் ஆனாலும் இதன் வாசனை மட்டும் அப்படியே இருக்கும். எனவே இதில் இறை சக்தி நிறைந்து விட்டால் போதும். அது வருடக்கணக்கில் உங்களுடனேயே நிலைத்திருக்கும். அவ்வாறு இந்த மரிக்கொழுந்தை வைத்து இறைவனுக்கு பூஜை செய்துவர உங்கள் அதிர்ஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும்.

- Advertisement -

எனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எப்பொழுதும் போல வீடு துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து, குளித்து முடித்து, சுவாமி படங்களுக்கும், பூஜை பாத்திரங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மர்கொழுந்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவாமி படங்களுக்கு வைக்கலாம். அல்லது மாலையாக தொடுத்தும் வைக்கலாம்.

பின்னர் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு அல்லது குல தெய்வத்திற்கு மரிக்கொழுந்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இந்த மரிகொழுந்து இரண்டு நாட்கள் உங்கள் பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். அதன் பின் இவற்றை எடுத்து பணம் வைக்கும் டப்பா மற்றும் வீட்டின் ஒரு சில பகுதிகளில் வைத்துவிடவேண்டும். இதில் இறைவனின் அருள் முழுவதுமாக நிறைந்திருப்பதால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -