உங்களிடம் வரும் பணம், நகை இரட்டிப்பாக, பெருகிக்கொண்டே இருக்க இந்த ஒரு மாலையை நரசிம்மருக்கு செலுத்தினால் மட்டும் போதுமே

ealakai
- Advertisement -

ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான ஜாதகத்தை எழுதி வைக்கிறோம். இந்த ஜாதகத்தின் மூலம் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த பதவியை அடையும், எப்படி படிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு ஜாதகத்தின் மூலம் ஒருவருடைய வாழ்க்கை ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஓரளவு கணிக்க முடியும். அதிலும் முக்கியமாக பலரும் கேட்கும் கேள்வி என்னவென்றால் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்குமா? என்று தான். அவ்வாறு பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் சுக்கிர பகவானின் அருள் கிடைக்க வேண்டும். சுக்கிர பகவானின் அருள் குறைந்து இருந்தால் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் 100% நிறைந்து இருந்தால் அவர்களுக்கு பணத்திற்கு குறைவு என்பதே இருக்காது. அவர்களின் முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகலோ அல்லது அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்துக்கலோ அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்.

- Advertisement -

ஆனால் சுக்கிர பகவானின் தாக்கம் குறைந்து இருந்தால் சம்பாதிப்பது என்பதே கேள்விக்குறியாக இருக்கும். அப்படியும் சம்பாதித்த பணம் கையில் தங்குவது என்பது சந்தேகம் தான். ஏதாவது வீண் விரயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணம் கையில் தங்காது. இவ்வாறு இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறானவர்கள் நரசிம்மருக்கு இந்த மாலையை அணிவிக்க, அது உங்களிடம் பணத்தை தங்க வைக்கும். அப்படி அணிவிக்க வேண்டிய மாலை என்னவென்றால் ஏலக்காய் மாலை தான். ஒரு குழந்தை அடம் பிடிக்கும் பழுது, குழந்தைக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை வாங்கித் தந்த எவ்வாறு சமாதானம் செய்கிறோமோ, அது போல இறைவனையும் குளிர்விக்க வேண்டும்.

- Advertisement -

அபிஷேகம் செய்யும் பொழுதும், அலங்காரம் செய்யும் பொழுதும் என தீப ஆராதனை காண்பதற்கு முன்னர் வரை கடவுள் குழந்தையாகத் தான் இருக்கிறார். எனவே தான் நாம் இறைவனை மகிழ்விக்க பல வேண்டுதல்கள் செய்கின்றோம் ஆகவே ஏலக்காயை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற நூலை எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சளை தடவி மஞ்சள் கயிறாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மஞ்சள் நிற ஊசி நூலில் ஒவ்வொரு ஏலக்காயாக கோர்க்க வேண்டும். ஒவ்வொரு ஏலக்காயையும் நூலில் கோர்க்கும் பொழுது நரசிம்மரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலை கோவிலுக்கு சென்று மாலை நரசிம்மருக்கு சாற்றி விட்டு, இரண்டு நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்துவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -