நீங்கள் குடியிருக்க நல்ல வாடகை வீடு கிடைக்க வேண்டுமா? நம்பிக்கையோடு நீங்கள் குடியிருக்கும் நிலை வாசல்படியில் இதை மட்டும் கட்டி தொங்க விடுங்கள் போதும்.

nila-vasal1
- Advertisement -

வாடகை வீட்டில் குடியிருக்கும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது. ‘தற்போது தங்கியிருக்கும் வாடகை வீட்டில் சவுகரியங்கள் சரியாக இல்லை. குடியிருக்க இன்னும் கொஞ்சம் நல்ல வீடாக கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று குடியிருக்க வேறு வாடகை வீட்டை தேடுவார்கள். ஆனால், வாடகைக்கு குடியிருக்க வேறு ஒரு நல்ல வீடு அமையவே அமையாது. வாடகைக்கு வேறு ஒரு நல்ல வீடு கிடைக்க வில்லை என்று நினைப்பவர்கள், தற்போது வசித்துவரும் வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டை விட, வசதியான வேறு ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்கும்.

nila-vasal

அடுத்தபடியாக, நீங்கள் சொந்த வீட்டில் தான் வசிக்கிறீர்கள். நீங்கள் வாடகைக்கு விடுவதற்கு வீடு கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வீட்டிற்கு குடியிருக்க நல்ல குடித்தனம் வர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். ஆனால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்யும் போது அது பலன் தராது என்ற ஒரு தகவலுடன் இந்த பதிவினை தொடங்குவோம்.

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டு நிலை வாசல் கதவையும், நிலைவாசல் படியும் சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிவப்பு நிற காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஜாதிக்காய், 2 விரலி மஞ்சள், 5 வால்மிளகு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி நெல் இந்த நான்கு பொருட்களையும் வைத்து சிவப்பு நிற நூலால் இதை முடிச்சு போல கட்டி உங்கள் வீட்டு நிலை வாசலுக்கு உள்பக்கம் மாட்டிவிட வேண்டும்.

red-cloth

இதை எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் இப்படி இந்த முடிச்சை கட்டும்போது குலதெய்வத்தை மனதார வேண்டி கட்டுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வாடகைக்கு நல்ல வீடு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் குடியிருக்கும் வீட்டின் நுழை வாசல் கதவுக்கு உள்பக்கம், மேல்பக்கம் இந்த முடிவினை கட்டி தொங்கவிட வேண்டும்.

nel

உங்களுக்கு சொந்த வீடு உள்ளது. நீங்கள் கட்டி வைத்திருக்கும் வீடுகளுக்கு நல்ல குடித்தனம் வர வேண்டுமென்று நினைத்தால், எத்தனை வீடுகள் குடித்தனம் வராமல் காலியாக உள்ளதோ அத்தனை வீட்டின் நிலைவாசல் படியையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அத்தனை வீட்டினுடைய நிலை வாசலு உள் பக்கமும் இந்த முடிச்சினை கட்டி தொங்கவிட வேண்டும்.

house

உங்களுக்கு நல்லபடியாக குடியிருக்க வாடகை வீடு கிடைத்துவிட்டாலோ, அல்லது உங்கள் வீட்டிற்கு நல்ல குடும்பம் குடி வந்து விட்டாலும், இந்த முடிசினை எடுத்து கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிடலாம்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு குலதெய்வத்தை வேண்டி செய்து பாருங்கள். நிச்சயமாக இந்த பரிகாரத்திற்க்காண பலனை ஒரு சில நாட்களிலேயே நீங்கள் பெறுவீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -