சிவபெருமானை நினைத்து 11 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். உங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது உறுதி.

sivan-deepam
- Advertisement -

கால் காசு வருமானமாக இருந்தாலும் அது அரசாங்க உத்தியோகம் ஆக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். காரணம் நிரந்தரமான வருமானம். கிடைக்கக்கூடிய சலுகைகள் ஏராளம். நீங்களும் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து காத்துக் கொண்டிருக்கிறீர்களா. தேர்வுகள் எழுதிவிட்டு நல்ல பதில் கிடைக்காமல் முடிவுகள் தாமதத்தில் இருக்கின்றதா. அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்றால், உங்களுடைய கனவை நனவாக்கும் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

shivan

முழு இறை நம்பிக்கையோடு உங்கள் கைகளால், அதாவது யார் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறார்களோ அவர்களுடைய கைகளால் சிவபெருமானை நினைத்து இந்த இந்த தீபத்தை ஏற்றினாலே போதும் நிச்சயமாக நல்லது நடக்கும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை காலை 6 இலிருந்து 7 மணிக்குள் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவனுக்கு செந்தாமரை அல்லது செண்பகப்பூ இந்த இரண்டு பூக்களில் எது கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொடுத்து உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அந்தக் கோவிலில் சிவபெருமானை நினைத்து ஐந்து மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.

deepam2

சிவபெருமானிடம் மனதார உங்களுடைய ஆசை நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, அதாவது அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, சிவபெருமானை மூன்று முறை வலம் வந்து அந்த கோவிலில் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையோடு ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பரிகாரம் இவ்வளவு தாங்க. 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மேல் சொன்ன விஷயங்களை மட்டும் தவறாமல் செய்து வந்து விட்டால் போதும். உங்களுடைய அரசாங்க வேலை கனவு நிச்சயமாக நிறைவேறும். பெண்களாக இருந்தால் இதை தீட்டு காலம் வந்துவிட்டால் அந்த வாரத்தை விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

senbaga-poo1

யாருக்கு வேலை வேண்டுமோ அவர்கள் கையால் பரிகாரத்தை செய்யும்போது இரட்டிப்பு பலனை பெற முடியும். இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -