இந்த சிவப்பு கயிறை கையில் இப்படி கட்டிக் கொண்டால், உங்களை சுற்றி சுற்றி அடிக்கும் பணக்கஷ்டங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும். ஏளனமாக பேசியவர்கள் முன்பு தைரியமாக தலை நிமிர்ந்து வாழலாம்.

narasimmar
- Advertisement -

ஒரு குடும்பம் நன்றாக வாழவில்லை என்றதுமே அவர்களைப் பார்த்து இந்த ஊர் உலகம் ஏளனமாக பேச தொடங்கி விடும். என்னமோ, இவர்கள் உலகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விடுவார்கள். நேரமும் காலமும் சூழ்நிலையும் ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக செயல்படும்போது, இப்படிப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் வரும். ஊர் உலகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். என்ன செய்வது. கூனிக்குறுகிப் போய் நிற்கக்கூடிய சமயத்தில் கூட உங்களுக்கு கை கொடுக்கக்கூடிய எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மன கஷ்டம் இருக்கிறது. கூடவே பணகஷ்டமும் இருக்கிறது. வெளியில் தலை காட்ட கூட முடியவில்லை. நல்ல வேலை கிடைத்தால் வருமானம் வரும். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கலாம். எல்லா துன்பமும் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் சோர்வு மட்டும் தான் எங்களுடைய துணையாக நிற்கின்றது. இந்த சோர்வை விரட்டி அடித்து விட்டு வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு உண்டான பரிகாரம் தான் இது.

- Advertisement -

சிகப்பு கயிறு வாங்கிக் கொள்ளுங்கள். எத்தனை கயிறு வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் இந்த கயிறை கையில் கட்டி விடலாம். அவர்களுக்கு மன தைரியம் வரும். கைநிறைய பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். நரசிம்மரை வேண்டித்தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகின்றோம். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பெரும்பாலும் நம்மில் நிறைய பேர் வீடுகளில் நரசிம்மர் படம் இருக்காது. அதனால் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் அந்த கயிறை வைத்து விடுங்கள்.

ஒவ்வொரு கயிறாக எடுத்து 5 முடிச்சு போட வேண்டும். தர்காவில் கயிறு மந்திரித்து முடிச்சு போட்டால் ஒவ்வொரு முடிச்சுக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளி தள்ளி முடிச்சு போடுவார்கள் அல்லவா. அதேபோல முடிச்சு. ஒவ்வொரு முடிச்சை போடும்போதும் ‘ஓம் நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி போட்டுக் கொள்ளுங்கள். ஐந்து முறை இந்த மந்திரத்தை சொல்லி ஐந்து முடிச்சை போட்டு, எல்லா கயிரையும் ஒன்றாக வைத்துவிட்டு, மனம் உருகி நரசிம்மரை வேண்டிக்கொண்டு, இந்த கயிறை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவருடைய கையிலும் கட்டி விடுங்கள். (கயிறை கையில் கட்டும் போதும் நரசிம்மர் பெயரை சொல்லிக்கொண்டே கட்டுங்கள்.)

- Advertisement -

ஒவ்வொரு முடிச்சுக்கு ஐந்து முடிச்சு போடும்போதும், ஐந்து முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். ஐந்து கயிறு தயார் செய்வதாக இருந்தால், 25 முறை நிச்சயமாக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். முழு மனதோடு நம்பிக்கையோடு நரசிம்மரின் பெயரைச் சொல்லி இந்த முடிச்சை போடுங்கள்.

இந்த கயிறை கட்டிய பிறகு ஒரு சில நாட்களில் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீரும். பணக்கஷ்டம், மன கஷ்டம், கடன் சுமை எல்லாம் சரியாகி ஊர் உலகத்தில் நீங்களும் தலைநிமிர்ந்து சுய கௌரவத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை அந்த நரசிம்மர் அமைத்துக் கொடுப்பார். கஷ்டங்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெற எல்லாவற்றிற்கும் முதலில் நமக்கு தேவை, மன தைரியம், மன உறுதி இதை கொடுக்கக்கூடிய சக்தி அந்த நரசிம்மருக்கு உண்டு. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -