நாள் முழுவதும் வீடு கமகமன்னு வாசம் வீசனுமா? 10 பைசா செலவில்லாமல் வீட்டை இப்படி துடைத்து பாருங்க பூச்சி, நோய்க்கிருமிகளும் அண்டாது!

cleaning-lakshmi
- Advertisement -

வீட்டை எப்பொழுதும் சுத்தமாக பளபளன்னு, நறுமணத்துடன் வைத்திருந்தால் நோய் கிருமிகளின் தாக்கமும் குறையும். பொதுவாக எழுபது சதவீத நோய்கள் நம் வீட்டில் இருக்கும் தரை பகுதி மூலமாகவே நமக்கு வருகிறது. வெளியில் சென்று விட்டு காலை அழும்பாமல் வீட்டுக்குள் வந்தால் நோய்க்கிருமிகள் தரையில் ஒட்டிக் கொண்டு விடும். அதனால் தான் காலை கழுவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். இப்படி பல்வேறு வகையில் வரக்கூடிய நோய்க்கிருமிகளை நீக்க, செயற்கையான முறையில் வாசம் மிகுந்த லிக்விட் வகைகளை பயன்படுத்தாமல், எப்படி இயற்கையான முறையில் நறுமணமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.

வீட்டிற்குள் வந்தாலே தெய்வீக மணமும், நல்ல ஒரு வாசமும் வீச இந்த மூலிகை பொருட்களை நாம் பயன்படுத்தி பார்க்கலாம். பத்து பைசா செலவே இல்லாமல் கமகமன்னு வீடு முழுவதும் வாசம் வீச எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம்? எப்படி அதை தயாரிக்கலாம்? மேலும் 24 மணி நேரமும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்வது?

- Advertisement -

வீட்டிற்குள் வந்த உடன் இந்த ஒரு வாசத்தை நீங்கள் உணர்ந்து விட்டால் இனி இயற்கை முறையை நாடுவீர்கள். அந்த அளவிற்கு சூப்பரான இந்த வீடு துடைக்கும் லிக்விடை தயாரிப்பதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை இலைகளை உருவி நன்கு கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் கற்பூரத்தூள் ஆகியவற்றை சேருங்கள்.

கற்பூரத்தை பொடித்து தூளாக்கி சேர்க்க வேண்டும். இதனால் வீடு நல்ல வாசத்துடன் இருக்கும். இதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் அறை ஸ்பூன் ஜவ்வாது பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு ஒரு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதை அப்படியே கொஞ்சம் கூட திப்பிகள், கசடுகள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது கெட்டுப் போகாது. இந்த லிக்விடை அரை பக்கெட் தண்ணீருடன் தேவையான அளவிற்கு சேர்த்து வீட்டை துடைத்து பாருங்கள். வீடு முழுவதும் பளபளன்னு பளிச்சென்று மின்னும். அது மட்டுமல்லாமல், வீடு துடைக்கும் பொழுது நல்ல ஒரு தெய்வீக மனம் வீச துவங்கும். இது நாள் முழுவதும் உங்கள் வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்கவும் உதவும்.

வீட்டிலிருந்து உங்களுக்கு வெளியே போகவே தோணாது, அந்த அளவிற்கு சூப்பரான ஒரு வாசத்தை கொடுக்க கூடிய இந்த லிக்விட் செய்வது ரொம்பவே சுலபம் தான். மேலும் வீட்டில் எறும்புகள், பூச்சிகள், கிருமிகள் எதுவும் வராது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களுடைய வாசம் விஷக்கிருமிகளை அண்ட விடாது எனவே வீடு எப்பொழுதும் ஆரோக்கியமான முறையில் சுத்தமாக இருக்கும் மேலும் இயற்கையான ரசாயன கலவையற்ற இந்த ஒரு மூலிகை லிக்குவிடை பயன்படுத்துவதால் நன்மையும் கூட!

- Advertisement -