வெள்ளை முடியை கருப்பாக்க காசு கொடுத்து ‘ஹேர் டை’ வாங்காதீங்க! இந்த 3 பொருள் இருந்தா போதும் இயற்கையாகவே 10 வயதை குறைத்து விடலாமே!

hair-dye-sembaruthi-nelli
- Advertisement -

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட சில காலங்களுக்கு பிறகு நம்முடைய தலைமுடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். கருப்பாக இருக்கும் இம்முடி வெள்ளையாக மாறும் பொழுது அதிக வயதுடைய தோற்றம் நமக்கு எட்டி பார்த்து விடுகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே இந்த நிலை ஏற்படுவதும் உண்டு. இப்படி வெள்ளை முடியை கருப்பாக்க காசு கொடுத்து ஹேர் டை வாங்காமல் வீட்டிலேயே இயற்கையாக ஈசியாக என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நீங்கள் காசு கொடுத்து செயற்கை ஹேர் டை வாங்கும் போது அதில் அம்மோனியா சேர்க்கப்பட்டிருக்கும். அமோனியா இல்லாத ஹேர் டை இருந்தாலும் அது உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த கெமிக்கல் வகைகளை பயன்படுத்தாமல் சற்று சிந்தித்து இயற்கையான முறையை கையாண்டால் உங்களுடைய வயதில் 10 வயதை எளிதாகவே குறைத்து விடலாம்.

- Advertisement -

இயற்கையான மூலிகை பொருள்களை இது போல பொடியாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும் பொழுது பயன்படுத்தி வந்தால், அடுத்த முறை நீங்கள் தலைக்கு குளிக்கும் வரை உங்கள் முடி கருப்பாகவே அப்படியே இருக்கும். கொஞ்சம் கூட நீங்கள் டை அடித்தது போன்ற உணர்வு உங்களுக்கு வராது. அது மட்டும் அல்லாமல் டை அடிக்கும் போது முகம் எல்லாம் கருப்பாகிவிடும். தரை எல்லாம் வீணாகிவிடும். அது போன்ற தொந்தரவுகளும் இந்த மூலிகை பொடியில் கிடையாது. முகம் கழுவினால் போதும், இந்த நிறம் காணாமல் போய்விடும்.

இதற்காக முதலில் செம்பருத்தி பூக்களை நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பூக்கள் கிடைக்குதோ, அந்த அளவிற்கு மற்ற பொருட்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சம அளவிற்கு நெல்லி முள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். நெல்லி முள்ளி என்பது நெல்லிக்காயை காய வைத்து கிடைக்கும் ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. நெல்லிக்காயில் மட்டும் உலர வைத்தாலும் அதன் சத்துக்கள் கொஞ்சம் கூட குறைவதில்லை என்பது மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது எனவே இந்த நெல்லி முள்ளி உங்களுடைய தலை முடிக்கு இயற்கையான முறையில் நல்ல நிறத்தை கொடுக்கும். இதனுடன் அவுரி விதைகள் சம அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் நைசாக பவுடர் போல பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இம்மூன்றும் சேர்ந்த இந்த அற்புதமான மூலிகை பொடியை தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு இரும்பு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இதை இரவு முழுவதும் இரும்பு பாத்திரத்தில் ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் உங்களுக்கு நல்ல நிறம் உள்ள கலவை கிடைக்கும். இதை தலை முழுவதும் தடவி ஊற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இருந்தபடி இந்த பேசியல் பண்ணிதான் பாருங்களேன். பியூட்டி பார்லர் போகலைன்னு சொன்னா கூட, யாரும் நம்ப மாட்டாங்க.

நன்கு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலை முடியை அலசி விடுங்கள். அவ்வளவுதான், உங்களுடைய வெள்ளை முடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும். நல்ல நிறமான முடி உங்களை பார்ப்பதற்கு அழகாக காட்டும். மேலும் அடுத்த முறை குளிக்கும் வரை இது அப்படியே இருக்கும். மீண்டும் நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது இது போல செய்து கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் கொஞ்சம் கூட ஏற்படாது.

- Advertisement -