ஞாயிற்றுக்கிழமை பிரத்யங்கரா தேவி வழிபாடு

prathiyangara
- Advertisement -

எதிரியால் நிறைய தொல்லை. தாங்க முடியாத கஷ்டம் குடும்பத்தில் வந்துவிட்டது. எங்களுடைய குடும்பம் நன்றாகவே இருக்கக் கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட பிரச்சனைகளை செய்கிறார்கள். எங்களுடைய பிள்ளைகள் நன்றாக இல்லை, என்னுடைய கணவன் என்னுடன் இல்லை, என்னுடைய மனைவி என்னுடன் இல்லை, எங்களுடைய குடும்பமே சின்னாபின்னமாகி இருக்கிறது.

வாழ்க்கையே முடிந்து விட்டது போல பிரச்சனைகள் தலை விரித்து ஆடுகிறது என்பவர்கள் எல்லாம், கண்ணை மூடிக்கொண்டு 7 வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரத்தியங்கிராதேவியை இப்படி வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போகும். பிரச்சனைகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து விடுவாள் இந்த பிரத்தியங்கிரா தேவி. அது என்ன வழிபாடு என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியங்கிரா வழிபாடு

கட்டாயம் இதற்கு உங்கள் வீட்டு பக்கத்தில் பிரத்தியங்கிரா தேவி கோவில் இருக்க வேண்டும். இல்லை என்றால் இந்த தேவி இருக்கக்கூடிய கோவிலுக்கு நீங்களே தேடிச் செல்லுங்கள். கொஞ்சம் சிரமம் பார்க்க கூடாது. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பிரத்தியங்கிரா தேவிக்கு எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். அந்த நேரத்தில் பிரத்யங்கிரா கோவிலில் நீங்கள் இரண்டு விளக்கு ஏற்றுங்கள். மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அம்பாளுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமத்தை வாங்கி உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

நல்ல வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமத்தை அர்ச்சகர் இடம் கொடுங்க. அந்த குங்குமத்தை கோவிலில் வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இப்படி 7 வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து பிரத்தியங்கிரா கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொண்டால், உங்கள் குடும்ப கஷ்டம் நிச்சயம் தீரும்.

எவ்வளவு பெரிய இழப்பை நீங்கள் எதிர்கொண்டிருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் எவ்வளவு பெரிய துன்பமான துயரமான நிகழ்ச்சி நடந்திருந்தாலும் சரி, அதை சரி செய்து தரக்கூடிய சக்தி இந்த வழிபாட்டிற்கு உண்டு. அதேபோல ராகு திசை நடப்பவர்கள், ராகு புத்தி நடப்பவர்கள், ராகுவால் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம் இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அரசு வேலை கிடைக்க லலிதா சகஸ்ர நாமம்

ராகுவால் உங்களுக்கு திருமண தடை இருந்தாலும் அது விலகும் ராகுவால் கடன் தொல்லை இருந்தாலும் அது நீங்கும். நிச்சயமாக உங்களுக்கு உண்டான நல்லதை அந்த அம்பாள் காட்டிக் கொடுப்பாள் கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவரவும் இந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

- Advertisement -