வற்றாத வருமானம் வந்து கொண்டே இருப்பதற்கு உங்களுடைய கையால் நாலு பேருக்கு இந்த 1 பொருளை தானமாக கொடுங்கள்.

- Advertisement -

என்றைக்குமே குறையாத வருமானம் இருக்க வேண்டும். அதேபோல வருமானம் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றால், சாஸ்திர ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். மிக மிகக் குறைந்த செலவில் அடுத்தவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இந்த ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்தால், உங்களுடைய குடும்பம் என்றென்றும் செல்வ செழிப்போடு வற்றாத பண பலத்துடன் இருக்கும். இது நிதர்சனமான உண்மை. வாங்க அந்த பரிகாரம் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நெல்லிக்காய். பெரிய நெல்லிக்காய் இருக்கும் அல்லவா. அதைத்தான் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இது ஆன்மீக ரீதியாக மகாலட்சுமி உரிய பொருளாகவும், குபேரனுக்கு பிடித்த பொருளாகவும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்து என்ன செய்யலாம். வெள்ளிக்கிழமை அன்று இந்த நெல்லிக்காயை கடையில் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். முந்தைய நாள் வாங்கி வைத்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

வாங்கிய நெல்லிக்காய்களை நவகிரகங்களில் இருக்கும் சுக்கிர பாகவானுக்கு வைத்து பூஜை செய்தாலும் சரி அல்லது மகாலட்சுமி சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில் மகாலட்சுமி பாதங்களில் வைத்து பூஜை செய்தாலும் சரி அல்லது குபேரர் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று குபேரரின் பாதங்களில் வைத்து பூஜை செய்தாலும் சரி, ஏதோ ஒரு தெய்வத்திடம் வைத்து பூஜை செய்து அந்த நெல்லிக்காயில் இருந்து ஒரே ஒரு நெல்லிக்காயை மட்டும் எடுத்து நீங்கள் சாப்பிட்டு கொள்ளுங்கள். (உங்கள் விருப்பம், 11 நெல்லிக்காய், 15 நெல்லிக்காய் எத்தனை நெல்லிக்காய்களை வேண்டும் என்றாலும் பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.)

மீதம் இருக்கக்கூடிய நெல்லிக்காய்களை கோவிலுக்கு வருபவர்கள் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று, பூஜை செய்த அந்த நெல்லிக்காயை உங்கள் கைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். யாருமே கஷ்டப்படக்கூடாது. எல்லோருக்கும் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும். அதற்காக இந்த நெல்லிக்காய் தானத்தை கொடுப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் மனதில். தவறே கிடையாது. நீங்கள் செய்யக்கூடிய இந்த நெல்லிக்காய் தானம் உங்களுடைய குடும்பத்தில் வற்றாத செல்வ வளத்தை கொடுக்கும்.

நீங்கள் தானமாக கொடுத்தீர்கள் அல்லவா அந்த நெல்லிக்காயை பெறுபவர்களுடைய குடும்பமும் சீரும் சிறப்புமாக இருக்கும். உங்களுடைய குடும்பத்திற்கும் கஷ்டம் வராது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடியது தான் பரிகாரங்கள். நாம் நான்கு நல்லது செய்யும்போது நமக்கு இரண்டு நல்லது திரும்பவும் நடக்காமல் போய்விடுமா என்ன. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -