மகாலக்ஷ்மி நமது வீடு தேடி வந்து செல்வத்தையும், மன நிம்மதியையும் வாரி வழங்கிட வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு இதை மட்டும் செய்தாலே போதும்.

amman
- Advertisement -

மனிதனின் மனதில் ஆயிரம் ஆசைகள் தோன்றலாம். ஆனால் அதில் சிலது தான் நிறைவேறும். அதற்க்கு காரணம் நமது பூர்வ வினை பாவ தோட்டங்கள் தான். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமது வாழ்க்கை அமைகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனாலும் நாம் சில பரிகாரங்களை முறையாக செய்வதன் மூலம் நமது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அப்படி நமக்கான பணத்தேவை உட்பட பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அதில் சிலவற்றையே செயல்படுத்த விரும்புவர். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவர். இல்லையேல் மன வருத்தத்திற்கு ஆளாவர். அவ்வாறு நாம் நினைத்த காரியத்தை வெற்றி அடைவதற்கு என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

- Advertisement -

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்திகள் இருக்கின்றன. இச்சா சக்தியே நமக்கு ஆசை ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. கிரியா சக்தி அந்த ஆசையை செயல்படுத்த உந்துதலாக இருக்கிறது. ஞான சக்தி தான் நாம் செய்யும் செயல் நல்லதா கெட்டதா என ஆராயும் அறிவை தருகிறது. இந்த மூன்று சக்திகளையும் உள் அடக்கிய தெய்வமாக கருதப்படுபவள் அம்மன். அம்மனை வழிபட்டால் இந்த மூன்று சக்திகளின் அருளை நம்மால் எளிமையாக பெற முடியும்.

அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. ஆகையால் வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்துவிட்டு வீட்டில் பூஜை செய்த பிறகு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு அம்மனுக்கு மகாலட்சுமியின் அம்சமான நெல்லிக்கனி மாலையை அணிவிக்க வேண்டும். மாலையில் நெல்லிக்கனியின் எண்ணிக்கை 11, 21, 54 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதே சமயம் மாலையின் நூல் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மாலையை அம்மனுக்கு அணிவித்து மனதார நாம் நினைத்த காரியத்தை வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அம்மனை 11 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வர, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எந்த வேண்டுதலாக இருந்தாலும் அது நிச்சயம் கைகூடும்.

மேற்கூறிய இந்த நெல்லிக்கனி மாலையை சாற்றுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும். நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். நாம் வைத்திருக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அல்லது 11, 15 வாரங்கள் நெல்லிக்கனி மாலையை சாற்றுகிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒருமனதோடு, முழுமனதாக பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்ளும் பொழுது கண்டிப்பாக எத்தனை வாரங்கள் நாம் செய்கிறோம் என்று வேண்டிக் கொண்டோமோ அத்தனை வாரத்திற்குள் அந்த காரியம் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கடைசி வாரம் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுதல் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

- Advertisement -