கெட்ட எண்ணத்தோடு யாராலும் நம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே முடியாது. இந்த 3 பொருட்களை சேர்த்து நிலை வாசலில் கட்டி வைத்தால்.

door-vasal-lakshmi
- Advertisement -

கெட்ட எண்ணம் கொண்டவர்களின் மூச்சு காற்று பட்டால் கூட நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்துவிடும். அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் கண் பார்வையும், பெருமூச்சும் சக்தி வாய்ந்தவை. எதிராளியின் பலத்தை நாம் எப்போதுமே குறைத்து எடை போடக்கூடாது. நம்முடைய குடும்பமும், நாமும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், உஷாராக சில விஷயங்களை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், நாம் நன்றாக வாழ்வதைப் பார்த்து சிலர், பொறாமையில், சில கெட்ட விஷயங்களை இன்றளவும் சில்லறைத் தனமாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் நம்முடைய வீட்டிற்குள் வருபவர்கள் கெட்ட எண்ணத்தோடு வந்தால், நன்றாக சந்தோஷமாக இருக்கின்ற குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை மூடிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தாலும் சரி, அல்லது நம்முடைய குடும்பத்தின் வளர்ச்சியை தடை செய்வதற்கு ஏதேனும் பொருட்களை கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பதற்காக வந்தாலும் சரி, நம் வீட்டை நோட்டம் பார்ப்பதற்காக வந்தாலும் சரி, அவர்களுடைய எண்ணம் பலிக்காமல் போவதற்கு நீங்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

- Advertisement -

ஒரு கருப்பு நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கடுகு, மிளகு 6, கல் உப்பு 1 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, இந்த நான்கு பொருட்களை வைத்து சிறிய முடிச்சாக கட்டி உங்கள் நிலை வாசல் படியில் தொங்கவிட வேண்டும். அதாவது வீட்டிற்குள் நுழைபவர்கள் தலைவாசலை தாண்டும் போது, தலைக்கு மேலே இந்த முடிச்சு இருக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்கள், இந்த முடிச்சை தாண்டி வந்தாலும் அவர்களுடைய உச்சந்தலை வழியாக, எதிர்மறை ஆற்றலை இந்த கருப்பு மூட்டை ஈர்த்து எடுத்துக்கொள்ளும்.

எதிராளி உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களுடைய குடும்பம் கெட்டுப் போக வேண்டும் என்று எந்த விஷயத்தை செய்தாலும் சரி, வயிற்றெரிச்சலோடு உங்களை பார்த்தாலும் சரி, கண் திருஷ்டி வைத்தாலும் சரி, கெடுதல் நினைப்பதற்கு ஏதேனும் பொருட்களை கொண்டு வந்தாலும் சரி, வீட்டிற்குள் வந்து சண்டையில் உங்களை சபித்தாலும் சரி, அத்தனையையும் செயல் இருக்கக் கூடிய சக்தி இந்த ஒரு முடிச்சுக்கு உண்டு.

- Advertisement -

சில பேருக்கு, சில நேரங்களில் எதிராளி வந்து சாபமே கொடுத்தாலும், எதிராளி வயிற்று எரிச்சல் பட்டாலும், எந்த கெட்டதும் நடக்காது. காரணம் அவர்களுடைய கிரகநிலைகள் ஜாதக கட்டத்தில் சரியாக அமர்ந்திருக்கும். ஆனால் சில நேரங்களில் சிலருக்கு செவ்வாய் பகவானுடைய அனுகிரகம் சிறிது குறைந்தாலும் சரி, அந்த சமயத்தில் எதிராளி நம்மை கவிழ்ப்பதற்கு எந்த திட்டம் போட்டாலும் அது உடனே நடந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜாதக கட்டம் எல்லாம் தெரியாது. எந்த ஜோசியரை போய் பார்க்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியாது. நமக்கு நேரம் நன்றாக உள்ளதோ இல்லையோ, நம்மை நாம் ஒரு பாதுகாப்பு வட்டத்தில் வைத்துக்கொள்ள நிலை வாசலில் முன்கூட்டியே இந்த முடிச்சை கட்டி தொங்க விட்டு வைப்பது நல்லது. குடும்பத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள், பரிகாரத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -