உங்கள் நிலை வாசல் இருக்கும் திசைக்கு, அதிர்ஷ்டம் தரக்கூடிய சுவாமி படம் எது? இந்த சுவாமி படத்தை நிலை வாசலில் வைத்தால் போதும் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் தூர ஓடிவிடும்.

door-vasal-lakshmi
- Advertisement -

வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் துயரங்களை கண்டு எப்போதுமே நாம் அஞ்சக்கூடாது. எதிர்த்து நின்று போராடினால் துன்பமும் துயரமும் நம்மை கண்டு அஞ்சி ஓடி விடும். இது வாழ்க்கையில் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் ‌. உங்களுக்கும் வாழ்க்கையில் கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே வருகின்றதா. உங்களுடைய நிலை வாசல் எந்த திசையை நோக்கி உள்ளது என்று முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த சிசைக்கு ஏற்றவாறு நிலை வாசலின் முன்பாக, நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் இந்த தெய்வத்தின் திரு உருவ படத்தை மாட்டி வைத்தாலே போதும். வீட்டிற்குள் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

உங்களுடைய வீடு கிழக்கு பார்த்த வாசலாக உள்ளதா. உங்களுடைய வீட்டின் நிலை வாசலுக்கு வெளியில், மேல் பக்கத்தில், செம்பினால் இருக்கக்கூடிய சூரியனின் திரு உருவ படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டு நிலைவாசல் வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் வைக்க வேண்டிய சுவாமி படம், குபேரனின் திரு உருவ படம். நிலை வாசலுக்கு வெளியே குபேரனின் திருவுருவப் படத்தை, வெளியே பார்த்தவாறு வைத்தால் நல்லதா என்று சில பேருக்கு சந்தேகம் வரும். வடக்கு பார்த்த நிலைவாசல் இருந்தால், அந்த நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் குபேரரது திருவுருவப் படத்தை வைப்பது மிக மிக நல்லது. இது வீட்டிற்கு நிறைய அதிர்ஷ்டத்தை ஈர்த்து கொடுக்கும்.

sun1

உங்கள் வீட்டு நிலைவாசல் மேற்கு பக்கம் பார்த்தவாறு இருந்தால் நீங்கள் வைக்க வேண்டிய படம் பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவப்படம்.

- Advertisement -

உங்கள் வீட்டு வாசல் தெற்குத் திசையை நோக்கி இருந்தால் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவப்படத்தை உங்கள் வீட்டு நிலை வாசலில் வைக்க வேண்டும். மேலே சொன்ன சுவாமி படங்கள் அனைத்தும் சிறிய சிலையாக கிடைத்தாலும் அதை வாங்கி நிலை வாசலில் வைத்துக் கொள்ளலாம். சிலையாக வைக்க முடியாதவர்கள் பேப்பரில் இருக்கக்கூடிய சுவாமி படங்களையும் நிலைவாசல் கதவிலும் ஒட்டிக் கொள்ளலாம். நிலை வாசல் சட்டத்திற்கு மேலே சுவரில் இடம் இருக்கும் அல்லவா அந்த இடத்திலேயும் ஒட்டி வைத்துக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.

panjamuga anjaneyar

உங்களுடைய வீடு தெற்கு பார்த்த வாசப்படியாக இருந்தால் மட்டும் வீட்டிற்குள் நுழைந்த உடன் எதிர் பக்கத்தில் ஒரு சிறிய கண்ணாடியை மாட்டி வையுங்கள். வீட்டில் நுழைபவர்கள் முதலில் அந்த கண்ணாடியை பார்த்து விட்டு வீட்டிற்கு வருமாறு அந்த கண்ணாடி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுடைய வீட்டிற்கு அது மிக மிக நல்லது.

mirror-poojai

தெற்கு பார்த்த திசையில் உள்ளவர்கள் தான் நிலை வாசலுக்கு எதிரே உள்பக்கத்தில் கண்ணாடி வைக்க வேண்டுமா. மற்ற திசையில் உள்ளவர்கள் என்ன செய்வது என்று கேட்டால், அது அவரவருடைய விருப்பம் தான். விருப்பப்பட்டால் மற்ற திசையில் வாசல் உள்ளவர்கள் கண்ணாடியை வைத்துக் கொள்ளலாம். மற்ற திசையில் நிலைவாசல் உள்ளவர்கள் கட்டாயம் இந்த கண்ணாடியை வைத்தே ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தெற்கு பார்த்த வாசப்படி உள்ளவர்கள் இந்த நிலை கண்ணாடியை வீட்டில் அமைத்து கொள்வது மிக மிக நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -