இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். தேவையான பணம், உங்களைத் தேடி வரும். ட்ரை பண்ணி பாருங்க.

lakshmi-cash
- Advertisement -

ஒரு சில சமயங்களில் இந்த வாழ்க்கை நமக்கு நிறைய அதிசயங்களை செய்து காட்டும். உதாரணத்திற்கு நாளைக்கு பிரியாணி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று மனசு சொல்லும். அடுத்த நாள் பார்த்தால் ஓசியில் யாராவது பிரியாணி சாப்பிட கூப்பிடுவார்கள். மனதிற்கு பிடித்த ஒரு நபர் யாரோ ஒருவர் என்று வைத்துக் கொள்வோம். இவங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு, அப்படி என்று நினைப்போம். அடுத்த நாள் பார்த்தால் அவங்களே வந்து நேரில் நிற்பார்கள். இப்படி சின்ன சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை சில சமயம் நாம் மனதில் நினைத்தது எல்லாம் அப்படியே நடக்கும். அப்படியே ஒரு கோடி ரூபாய் தேவை என்று நினைத்தால், அந்த ஒரு கோடி ரூபாய் கையில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்படி நாம் நிச்சயம் சிந்தித்து இருப்போம்.

மனிதனாகப் பிறந்து, இவ்வளவு தூரம் வளர்ந்த நாளில் ஒரு முறையாவது இந்த சிந்தனை உங்களுக்கு வராமல் இருந்திருக்கிறதா. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அப்படி ஒரு சிந்தனை வரவில்லை என்றால் நீங்கள் மனிதர்களே இல்லை. நீங்கள் மகனாகத்தான் இருப்பீர்கள். சரி அதை விடுங்க. நினைத்த நேரத்தில் நினைத்த பணம் கையில் கிடைக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. ஒரு சின்ன ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

நினைத்தவுடன் நினைத்த பணம் நம்மை தேடி வர சொல்ல வேண்டிய வார்த்தை:
நினைத்த பணம் நினைத்தவுடன் நம் கையில் வர வேண்டும் என்பதற்காக, உடனடியாக 10 லட்சம் வேண்டும். 5 லட்சம் வேண்டும் என்று கேட்டுடாதீங்க. அவசர தேவை. அத்தியாவசிய தேவை உள்ளது. இந்த தேவைக்காக எனக்கு பணம் வேண்டும். மூன்று மாதம் கழித்து கல்யாணம். மூன்று மாதம் கழித்து என்னுடைய குழந்தைக்கு மேல் படிப்புக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். அல்லது மூன்று மாதம் கழித்து ஒரு ஆபரேஷன் செய்யணும். மருத்துவ செலவு இருக்குது, அல்லது ஒரு சில நாட்களில் சொந்த நிலம் வாங்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பிளான் இருக்கு. அதுக்கு தேவையான பணத்தை நான் சம்பாதிக்க வேண்டும். இல்லை அதற்கு தேவையான பணம் லோன் கிடைக்க வேண்டும். இப்படி அவசியமான தேவையான விஷயங்களுக்கு பண தேவை உள்ளது. அதை பூர்த்தி செய்ய இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உடனடியாக 1000, 500 கைமாத்தாக யாராவது காசு கொடுத்தால் நன்றாக இருக்கும். அடுத்த மாதம் நான் அவர்களுக்கு அதை திருப்பி கொடுத்துவிடுவேன், என்ற சூழ்நிலையும் நம்மில் நிறைய பேருக்கு உள்ளது. இப்படி உடனடியாக இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கில் காசு தேவையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்படியாக உங்களுடைய தேவைக்கு ஏற்ப நியாயமான விஷயங்களுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்துக்கோங்க பல் தேய்த்து விட்டு இந்த வார்த்தையை சொல்ல வேண்டும்.

‘தன சம்பிரதி’ இதுதாங்க அந்த வார்த்தை. காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டு, நீங்கள் சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில் இந்த வார்த்தையை 27 முறை சொன்னால் தனவசியம் உண்டாகும். தினமும் நம்பிக்கையோடு இதை செய்யுங்க. நீங்கள் வேண்டும் என்று நினைத்த பணம் உங்களை தேடி வரும். நிச்சயமாக அதற்கான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இதை மட்டும் நீங்கள் தவறாமல் செய்து விட்டால் இது வரை வராத குலதெய்வம் கூட வீடு தேடி வந்து உங்களை வாழ வைக்கும்.

நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு தொகை தேவை என்று நினைத்து இந்த வார்த்தையை சொல்ல தொடங்கிநீங்களோ இருக்கிறீர்களோ, அந்த பணத்தை கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்க வேண்டிய வேலையை இந்த ஒரு வார்த்தை செய்யும். ஆண்கள் பெண்கள் என்று யார் வேண்டுமென்றாலும் இந்த வார்த்தையை சொல்லலாம். அவசர பணத் தேவையை பூர்த்தி செய்ய இந்த வார்த்தை உங்களுக்கு சின்ன உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -