நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற உங்கள் வீட்டில் வாரம் தோறும் தவறாமல் செய்ய வேண்டிய பரிகாரம். இதனை தொடர்ந்து செய்து பாருங்கள், மாற்றம் உண்டாகும்

bay-leaf-burning
- Advertisement -

மனித வாழ்க்கைக்கு தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தேவைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் சூழ்நிலையைப் பொருத்து பணம், வாகனம், வீடு, நிலம் இவ்வாறு வெவ்வேறு தேவைகள் இருக்கும். இவற்றை ஆசை என்றும் சொல்லலாம். ஆனால் ஆசைப்படும் அனைவருக்கும் இவை அனைத்தும் கிடைத்து விடுகிறதா என்பது சந்தேகம் தான். ஒரு சிலரின் ஆசைகள் நினைத்த உடனே நடைபெறும், ஒரு சிலருக்கு கடின உழைப்பிற்குப் பிறகு தான் இவற்றை அடைய முடியும், ஆனால் ஒரு சிலர் தங்கள் இறுதி காலம் வரை அவர்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல் போய்விடுகிறது. இவ்வாறு உங்கள் ஆசைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாரம்தோறும் நமது இல்லங்களில் இந்த பிரியாணி இலை யாகம் செய்திட நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

home

நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த அனைத்து விஷயங்களையும் இன்றைய தலைமுறையினரில் சிலர் மூட நம்பிக்கைகளாக பார்க்கின்றனர். ஆனால் விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டறக் கலந்த விஷயத்தை தான் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். இவர்கள் பின்பற்றி வந்த அனைத்து விஷயங்களும் நம்பக் கூடியதாகவும் அதிக பலன் தரக்கூடியதாகவும் இருந்துள்ளன. ஒரு சிலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் நம்பிக்கையுடன் இவற்றை செய்து பாருங்கள். நம்பமுடியாத மாற்றத்தை உணர்வீர்கள்.

- Advertisement -

இந்த உலகில் செடிகள், கொடிகள், பூக்கள், மரங்கள் என்று அனைத்து வகையான தாவர இனங்களும் இருக்கின்றன. அதில் உள்ள அனைத்துத்திற்கும் ஒவ்வொன்றிற்கென்று ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும். ஒரு சில இலைகள் வாசனை உள்ளதாகவும், ஒரு சிலவை வாசனை அற்றதாகவும் இருக்கும். குறிப்பிட்ட சில பூ மற்றும் இலைகளில் மட்டுமே வாசம் இருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் பிரியாணி இலை.

money

இதில் பலவித மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் நிறைந்து இருக்கின்றன. இந்த பிரியாணி இலையில் நடக்கவேண்டிய ஆசைகளை எழுதி அதனை ஒரு டப்பாவில் போட்டு, அதனுடன் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, மூடி போட்டு வைத்துவிட்டால், நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். உங்கள் ஆசைகள் இந்த பிரியாணி இலையின் மூலம் பிரபஞ்சத்தை அடைந்து உங்கள் மனதில் இருக்கும் ஆசை நிறைவேறும்.

- Advertisement -

அத்துடன் வாரத்திற்கு ஒரு முறை ஒரு மண்சட்டியில் நவகிரக குச்சிகளை அடுக்கி வைத்து, அதன் மீது சிறிதளவு பச்சை கற்பூரம் வைத்து தீமூட்டி, அந்த யாகத்தை சுற்றி வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்துகொண்டு, ஒவ்வொருவர் கையிலும் சிறிதளவு பிரியாணி இலையை வைத்துக் கொண்டு மனதில் நினைத்த காரியங்களை இறைவனிடம் வேண்டிக் கொண்டு ஒவ்வொரு இலையாக நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.

Homam

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், என்னை சுற்றி இருக்கும் உறவினர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும், வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும், உடல் நிலை சரியாக வேண்டும் இவ்வாறு தனக்கான வேண்டுதல்களை மனதில் நினைத்துக்கொண்டு, 5 நிமிடம் அந்த தீ எரியும் வரை பிரியாணி இலைகளை அதில் போட்டு எரிக்க வேண்டும். பின்னர் அந்த சாம்பலை நீரில் கரைத்து வாரம் ஒருமுறை வீட்டில் தெளித்து வர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -