வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் ஜெயித்து நல்ல அந்தஸ்தில் வாழ ஐந்து நாள் மட்டும் தூங்கி எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்தால் போதும். நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவு உங்கள் வாழ்க்கை மாறி விடும்.

wakeup success
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த ஒரு செயலை செய்வதற்கும் ஆசை மட்டுமே போதாது. ஆசையுடன் சேர்ந்த முயற்சியும் தேவை அப்போது தான் அதற்கான முழு பலனை நாம் அடைய முடியும். சிலருக்கு இதை எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை செய்வதற்கான எண்ணம் மட்டும் வராது. நீங்கள் நினைத்ததை எல்லாம் நினைத்த வண்ணம் நிறைவேற்ற இந்த ஒரு பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமென்றால் நம்முடைய மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் முதலில் மறைய வேண்டும். அதற்கு நம்முடைய எண்ணத்தை நேர்மறையாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவதற்கான ஒரு எளிய வழிமுறை தான் இந்த பரிகாரம். இதை எப்படி செய்ய வேண்டும். எப்படி செய்தால் இதன் மூலம் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஆசைகள் நிறைவேற பரிகாரம்
இந்த பரிகாரத்தை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் உறங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் மூளையானது அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் சொல்லும் செய்யும் அனைத்தையும் மூளையானது அப்படியே ஏற்றுக் கொள்ளும். எனவே இந்த பரிகாரத்தையும் நாம் இது போன்றதொரு நேரத்தை தேர்ந்தெடுத்து தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்ய எந்த நாளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த நாளிலிருந்து ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இடையில் நிறுத்தக் கூடாது. இது ஒரு ஏஞ்சல் என் தொடர்புடைய பரிகாரம் என்றே சொல்லலாம் அதாவது இந்த பரிகாரத்திற்கு தொடர்புடைய ஏஞ்சல் என் 555. இதில் 5 என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது.

- Advertisement -

காலையில் குளித்த முடித்த பிறகு பூஜை அறையில் அமர்ந்து 5 நிமிடம் வரை முதலில் உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வெள்ளை நிற நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ஆசை எதுவோ? தேர்வில் வெற்றி பெற வேண்டும், திருமணம் ஆக வேண்டும், குழந்தை பாக்கியம் பெற, பணம் சேர வேண்டும், வீடு கட்ட வேண்டும் என எந்த ஆசையை நீங்கள் நினைத்திருக்கிறீர்களோ அது நிறைவேறியதாக எழுத வேண்டும். அது நிறைவேறி இருந்தால் உங்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் எழுத வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு 55 முறை எழுத வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து நாட்கள் எழுது வேண்டும் என்பது தான் இந்த பரிகாரம். ஐந்து நாட்கள் இதை செய்யும் பொழுது அந்த ஆசைகள் உங்களுக்கு நிறைவேறுவதற்கான வாய்ப்புகளை நீங்களே பிரபஞ்சத்திடம் வேண்டி கேட்டு பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்ததாக மாறி விடும். எனவே நிச்சயம் அந்த ஆசை நிறைவேறும் என்பது தான் இந்த பரிகாரத்தின் பலனே.

இதையும் படிக்கலாமே: இந்த 3 ராசிக்காரர்கள் யார் காலிலும் விழுந்து வணங்கவே கூடாது. இதில் உங்கள் ராசியும் இருக்குதான்னு பார்த்துக்கோங்க. உங்கள் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம்.

நம்முடைய ஆசைகள் நிறைவேற நம் முயற்சியுடன் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் ஐந்து நாட்கள் மட்டும் செய்தாலே போதும். உங்கள் ஆசைகள் நிறைவேறுவதற்கான அனைத்து வாய்ப்பையும் பிரபஞ்சம் உங்களுக்கு தேடிக் கொண்டு வந்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -