இந்தப் பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும். நீண்டநாட்களாக தொல்லை கொடுத்து வரும் தீராத நோய் நொடிக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

sleep
- Advertisement -

கர்மாவினால் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கும். அந்த வரிசையில், சில பேருடைய வாழ்க்கையில் உடல் ரீதியாக பிரச்சனைகளும் இருக்கும். அதாவது தீராத நோயால் அவதிப்பட்டு வருவார்கள். இதுவும் கர்ம வினைப் பயனால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை தான். நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் அன்றாடம் வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி செல்ல வேண்டுமென்றால், அதற்கு மருந்து மாத்திரை தேவை. உயிர் வாழ வேண்டும் என்றால் மருந்து மாத்திரை சாப்பிட்டால் தான், வாழ முடியும் என்ற சூழ்நிலை இருப்பவர்கள் நிச்சயமாக கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கர்ம வினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

sad

உங்களுக்கு கர்ம வினையால் தீராத நோய் பிரச்சனைகள் இருந்தாலும் சரி, அல்லது என்ன காரணம் என்றே தெரியவில்லை. உடல் உபாதைகள் இருந்து கொண்டே வருகிறது. சம்பாதிக்கும் பணம் எல்லாம் மருந்து செலவுக்கே வீண்விரயம் ஆகிறது என்பவர்களுக்கும், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் நோய் நொடியில் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு ஒரு சுலபமான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

- Advertisement -

கர்மவினைகளால் வரக்கூடிய நோயை கரைக்கக் கூடிய சக்தி கடுகுக்கு உள்ளதாக சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. 18 கருப்பு மூலிகை வகைகளில் இந்த கருப்பு கடுகும் இடம்பெற்றுள்ளது. கருப்பு கடுகு என்றால் நாம் சமையலுக்குப் பயன்படுத்த கூடிய சாதாரண கடுகு தான். இந்த கடுகை வைத்து வியாதிகளை எப்படி தீர்ப்பது.

Kadugu

அரை கிலோ அல்லது ஒரு கிலோ அளவு சமையலுக்கு பயன்படுத்தும் கடுகை கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு செல்ல வேண்டும். ஒரு வெள்ளைத்துணியில் இந்த கடுகை குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, உங்களுக்கு இருக்கும் தீராத வியாதிகள் படிப்படியாக குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கடுகை வெள்ளை துணியில் வைத்து லேசாக முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கடுகு முடிச்சை தினம்தோறும் படுக்கும்போது தலையணையாக உங்களுடைய தலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் இந்த கடிகு தலையணையை தலைக்கு வைத்துக் கொண்டாலும் சரி தான். முடியாதவர்கள் கழுத்து வலிக்கிறது என்று நினைப்பவர்கள் 1 மணி நேரமாவது இரவு நேரத்தில் இந்த கடுகை தலையணை போல தலைக்கு வைத்து தூங்க வேண்டும்.

vinayagar-pray

உங்கள் வசதிக்கு ஏற்றவாறு கடுகை வெள்ளைத் துணியில் தலையணை போல தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இப்படி மூன்று மாதகாலம் தினம்தோறும் இந்த கடுகை தலைக்கு அடியில் வைத்து தூங்கி வர தீராத வியாதியால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்கும். மூன்று மாதத்திற்கு பிறகும் இந்த கடுகு தலையணையை பயன்படுத்தலாம். வேண்டாம் என்று நினைப்பவர்கள் பழைய கடுகை ஓடும் நீரிலோ அல்லது கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.

sleep1

தீராத வியாதிகளின் பட்டியலில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. உங்களுக்கு எந்த வியாதி இருந்தாலும் சரி, அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். நிச்சயமாக அடுத்த முறை நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது, உங்களுடைய உடல் நிலை ஆரோக்கியத்தில் ஒரு படியாவது முன்னேற்றத்தில் இருக்கும்.

- Advertisement -