உடம்பில் இருக்கும் நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்வு கிடைத்திட இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள்

theraiyar-health
- Advertisement -

மனிதனாகப் பிறந்தால் உடல் ஆரோக்கிய பிரச்சனை என்பதை சந்தித்து தான் ஆக வேண்டும். நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வைத்தும், சுற்றுப்புறச்சூழலை பொறுத்தும் கால மாறுபாடுகளை கொண்டும் உடலில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. உடலை பாதிக்கும் நோய்கள் ஒரு வாரம் வரை இருந்து சரியாகி விடும் அல்லது ஒரு மாதம் வரை நம்மை ஆட்டிப்படைக்கும். சில நோய்களால் நம் வாழ்க்கை முழுவதுமே நாம் போராட வேண்டியிருக்கும். இப்படி ஒவ்வொரு மனிதனும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நோயிலிருந்து விடுபட இந்த மந்திரத்தை மட்டும் தவறாமல் உச்சரித்து வாருங்கள். இந்த நோய் தீரும் மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

health

நமது உடலில் நோய் ஏற்பட போகிறது என்றால் நமக்கு முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும். நன்றாக இருக்கும் நமது உடல் சற்று சோர்வாக காணப்படும். உடலில் ஏதேனும் ஒரு சில பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். அப்படி இருக்கும் பொழுதை நாம் கவனமாக இருக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

நீங்கள் நோய் வாய்ப்பட்டிருப்பதை என்று உணர்கிறீர்களோ அன்றைய நாளை கவனமாக கவனிக்க வேண்டும். அன்று என்ன திதி, என்ன கிழமை, என்ன நட்சத்திரம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். நட்சத்திரங்களில் பரணி, திருவாதிரை, ஆயுள்யம், பூரம், சுவாதி, சதையம் போன்றவையும், திதியில் நவமி, துவாதசி, சஷ்டி, தசமி போன்றவையும், கிழமையில் சனி, ஞாயிறு, செவ்வாய் இவை மூன்றும் இருந்தால் இந்த நோய் பிரச்சனையில் இருந்து விடுபட மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

chandrashtama

அட உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இப்படி நாள், கிழமை பார்க்க முடியுமா என்று பலருக்கும் தோன்றும். ஆனால் கடவுளின் அனுகூலம் இருப்பவர்கள் மட்டுமே இதனை கவனிக்க முடியும். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இதனை தவறாமல் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். இங்கு கூறப்பட்டுள்ள திதி, கிழமை, நட்சத்திரத்தில் நோய்வாய்படும் பொழுது அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அப்பொழுது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த நோயினை துச்சமாக எண்ணி கவனக்குறைவாக இருந்தால் அது பேரிழப்பை கொடுத்துவிடும்.

- Advertisement -

இது போன்ற நேரங்களில் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இறைவனின் அருளைப் பெற வேண்டும். அதற்காக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் அவர்களால் முடிந்தால் இந்த மந்திரத்தைச் சொல்லலாம். அப்படி முடியாதவர்களுக்கு அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களின் கையை பிடித்துக்கொண்டு இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கலாம்.

murugan

ஓம் பாலசுப்ரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வரவர சுவாஹா!

என்று இந்த சிறப்பு மந்திரத்தை முருகப் பெருமானை மனதார நினைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுக்கும் முன்பாகவும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டும் இந்த மந்திரத்தை அவர்களின் நோய் குணமாகும் வரை சொல்லிக் கொண்டே வர வேண்டும்.

- Advertisement -