குப்பையில் தூக்கி போடும் இந்த பொருளுக்கு இத்தனை பவரா? 1 ரூபாய் கூட செலவு செய்யாமல், முடியை, முட்டிக்கால் வரை வளர்க்க இதை விட சுலபமான டிப்ஸ் வேற எதுவுமே இருக்க முடியாதுங்க.

hair11
- Advertisement -

காசு கொடுத்து வாங்க கூடிய எந்த பொருளும் நமக்கு வேண்டாம். தினமும் சமையலறையில் இந்த ஒரு பொருளை குப்பையில் தூக்கி போடாமல், அப்படியே எடுத்து உங்களுடைய தலைமுடிக்கு இப்படி பயன்படுத்தி வந்தால், தலைமுடி கடகடவென அடர்த்தியாக வளர்ந்து கொண்டே செல்லும். குறிப்பாக முடி உதிர்ந்த இடத்தில், மீண்டும் சீக்கிரமாக புதிய முடிகள் வளர்வதற்குக் இந்த டிப்ஸ் ரொம்பவும் உதவியாக இருக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பின் சொல்லக்கூடிய குறிப்பைப் பின்பற்றி பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்து வெங்காயத் தோல் தான் அந்த ஒரு பொருள் என்று நாம் கண்டுபிடித்து இருப்போம் அல்லவா. குப்பையில் போட கொடிய வெங்காயத் தோலை பயனுள்ளபடி எப்படி மாற்றுவது. இரண்டு அல்லது மூன்று வெங்காயத்தின் மேலே இருக்கக்கூடிய தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். சிவப்பு நிற வெங்காயத் தோல் தான் நமக்குத் தேவை. வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய வெங்காய தோல் நமக்கு தேவை படாது.

- Advertisement -

1 டம்ளர் அளவு தண்ணீரை, 1 பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் வைத்து அதில் வெங்காயத் தோலை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். 1 டம்ளர் அளவு தண்ணீர் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் வரும் வரை நன்றாக கொதித்து தண்ணீர் அப்படியே லேசான பிங்க் நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வடிகட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது.

இது வெங்காய தோல் தான். தினம் தினம் காய்ச்சி கூட தினம் தினம் ஃபிரஷாக நம்முடைய தலைக்கு இந்த தண்ணீரை அப்ளை செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுடைய தலையில் மயிர்க்கால்களில் இந்த தண்ணீர் படும்படி நன்றாக ஸ்பிரே செய்து கொண்டு 15 நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு ஒரு ஐந்து நிமிடங்கள் தலைக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடலாம். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள். தொடர்ந்து ஒருமாதம் இந்த குறிப்பை பின்பற்றும் போதே முடி உதிர்வு குறைந்து புதிய முடி வளர்வதை நிச்சயமாக உங்களால் பார்க்க முடியும்.

நீங்கள் வீட்டில்தான் இருக்கிறீர்கள். இந்த தண்ணீரை தலையில் ஸ்பிரே செய்வதன் மூலம் ஏதேனும் வாடை அடித்தால் கூட பிரச்சினை கிடையாது என்றால், இந்த தண்ணீரை தலையில் அப்ளை செய்து விட்டு உடனடியாக தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில் இருக்கும் ஈரத்தை 15 நிமிடங்கள் கழித்து நன்றாக காய வைத்து விட்டால் கூட போதுமானது தான்.

நிறைய பேருக்கு வெங்காயத்தை அரைத்து தலையில் போட்டாலோ, சாறு எடுத்து தலையில் போட்டாலோ உடல் குளிர்ச்சியாகி சளி பிடிக்கும். மண்டை பாரம் வரும். ஆனால் வெங்காயத்த் தோலை இப்படி பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் முடியை வளர்ப்பதற்கு இதை விட சுலபமான டிப்ஸ் வேறு என்ன இருக்க முடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -